என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
காலில் விழுந்த சுவாமி சிவானந்தா - பதறிய குடியரசு தலைவர்: பத்மவிருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி
Byமாலை மலர்21 March 2022 4:11 PM GMT (Updated: 21 March 2022 4:11 PM GMT)
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் உள்பட 8 பேர் பெற்றனர்.
புதுடெல்லி:
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை உள்பட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனாவாலா உள்பட பலரும் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், 125 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
முன்னதாக, விழா அரங்கிற்கு வந்த சுவாமி சிவானந்தா அங்கிருந்த அனவைரையும் வணங்கினார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அமர்ந்த இடத்துக்கு சென்ற சிவானந்தா அவரையும் தரையில் விழுந்து வணங்கினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி அவரை குனிந்து வணங்கினார்..
தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தரையில் விழுந்து வணங்கினார் சுவாமி சிவானந்தா. இதைக் கண்டு பதறிப்போன ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரை உடனடியாக எழுப்பி பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார். இச்செயல் விழா அரங்கில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்...காங்கிரஸ் தேர்தல் குழுவை புதிதாக நியமிக்க வேண்டும்- அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X