search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 3 மேல்சபை எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு
    X

    கேரளாவில் 3 மேல்சபை எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு

    • பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது.
    • தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. மேலும் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த பதவிகளுக்கு கேரள காங்கிரஸ்(எம்) கட்சி ஜோஸ் கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுனீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஹரிஸ் பீரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஜோஸ் கே.மணி, சுனீர், ஹரிஸ் பீரன் ஆகிய 3 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள்.

    Next Story
    ×