search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருவனந்தபுரத்தில் சோகம்- ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
    X

    ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை காணலாம்.

    திருவனந்தபுரத்தில் சோகம்- ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

    • ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ளத்தில் இருந்து தப்பிவந்த அகில் மற்றும் அனந்தராம் ஆகிய இருவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி சரிதா. இவர்களது மகன்கள் அமல், அகில். அனில்குமார் கேரள போலீஸ் ஐ.ஜி. ஹர்ஷிதா அத்தலூரின் வாகன டிரைவர் ஆவார். நேற்று அவரது வீட்டுக்கு அவருடைய சகோதரர் சுனில்குமார் மற்றும் சகோதரி ஸ்ரீபரியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.

    மதியம் அனில்குமாரின் வீட்டில் 3 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்பு அவர்கள் மூணாட்டுமுக்கில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்கள். அங்கு பயிர்களுக்கு உரமிடும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். வேலை முடிந்ததும் அனைவரும் அங்குள்ள கரமனா ஆற்றில் குளித்தனர்.

    அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனில்குமாரின் சகோதரி ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த்(25) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப்பார்த்த மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர்.

    அனில்குமாரின் மற்றொரு மகன் அகில், சுனில்குமாரின் மகன் அனந்தராமன் ஆகியோர் ஆற்றில் நீந்தி கடந்து வெளியே வந்துவிட்டனர். ஆனால் அனில்குமார், அவரது மகன் அமல், ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த், சுனில்குமாரின் மகன் அத்வைத் ஆகிய 4 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து வெள்ளத்தில் இருந்து தப்பிவந்த அகில் மற்றும் அனந்தராம் ஆகிய இருவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு நெடுமங்காடு தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மழை காரணமாக பேப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் கரமனா ஆற்றில் அதிகமாக தண்ணீர் சென்றுள்ளது. இதனை அறியாக அனில்குமாரின் குடும்பத்தினர் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்து விட்டனர்.

    Next Story
    ×