search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    தெலுங்கானாவில் 6 எம்.எல்.சி.க்கள் காங்கிரசில் இணைந்தனர்
    X

    தெலுங்கானாவில் 6 எம்.எல்.சி.க்கள் காங்கிரசில் இணைந்தனர்

    • தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
    • சந்திரசேகரராவ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ரேவந்த்ரெட்டி உள்ளார். இந்த நிலையில் சந்திரசேகரரராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.சி.க்கள் (சட்டசபை மேல்சபை உறுப்பினர்கள்) முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கடசியில் சேர்ந்தனர்.

    தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, மல்லேசம் ஆகிய 6 எம்.எல்.சி.க்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகி காங்கிசில் இணைந்துள்ளனர். இது சந்திரசேகரராவ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    கடந்த மாதம் பாரத ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்களான காலே யாதய்யா, சஞ்சய்குமார் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×