search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1: இஸ்ரோ
    X

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1: இஸ்ரோ

    • சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1.
    • சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல்- 1 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

    நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செயவதற்காக சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவில், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது.

    சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.

    அதன்படி, வரும் செப்டம்பர் 2-ந்தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×