என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வருடாந்திர பிரமோற்சவம்: திருப்பதியில் 7 லட்சம் லட்டுகள் தயாராகிறது
- பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி முதல் 12 வரை நடக்கிறது.
- திருமலை மலை சாலைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந் தேதி முதல் 12 வரை நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜே.ஷ்யாமளா ராவ் கூறியதாவது:-
திருப்பதி பிரமோற்சவ விழாவின் போது தினமும் காலை 8 முதல் 10 மணி வரையிலும் இரவு 7 முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெறும். கருட வாகன சேவை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.
அக்டோபர் 4-ந்தேதி மாலை, மாநில அரசு சார்பில் வெங்கடேசப் பெருமானுக்கு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார். அவர் சேஷ வாகன சேவையிலும் பங்கேற்பார்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பல ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுமார் 7 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்படும். கருட வாகன சேவைக்காக மாவட்ட காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கருட வாகன சேவை நாளில் திருமலை மலை சாலைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.
அனைத்து கல்யாண கட்டாக்களிலும் இடைவிடாமல் 24 மணி நேரமும் பக்தர்கள் மொட்டை அடிக்க வசதியாக கூடுதல் முடிதிருத்தும் பணியாளர்களை நியமிக்கப்படுவார்கள்.
அன்னதான கூடம் மட்டுமின்றி பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் அன்னதானம், பால் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்