search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

    • ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

    அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக கரீம்கஞ்ச் காவல் துறை கண்காணிப்பாளர் பார்த்த ப்ரோதிம் தாஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×