search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்- கர்நாடக அரசு
    X

    நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்- கர்நாடக அரசு

    • நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது.

    அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, "தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும்" என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

    அதேபோல், தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருகிறது கர்நாடக அரசு.

    முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவையில் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    நீட் விலக்கு கோரி மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×