search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மனைவியின் ஆபாச படம் பார்த்த கணவன் தற்கொலை- காதலன் வெட்டிக் கொலை
    X

    மனைவியின் ஆபாச படம் பார்த்த கணவன் தற்கொலை- காதலன் வெட்டிக் கொலை

    • மகேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 24). இவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    இந்நிலையில், மகேஷுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இளம்பெண் தொடர்பை துண்டித்துக் கொண்டார். ஆனால், அதனை ஒத்துக்கொள்ளாத மகேஷ், தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.

    இதற்கிடையே, இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் மகேஷ் கடும் கோபம் அடைந்தார். காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை, அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார்.

    மனைவி காதலனுடன் இருந்த வீடியோவை பார்த்த வாலிபர் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்வளவு கொடூர சம்பவங்கள் நடந்த பின்னரும் மகேஷ் இளம்பெண்ணை விடவில்லை. தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என மீண்டும் தொல்லை கொடுத்து வந்தார்.

    இது குறித்து இளம்பெண் அவரது பெற்றோரிடம் கூறினர். அவரது குடும்பத்தினர் மகேஷுக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தனர்.

    அவர் வந்தவுடன் இளம் பெண்ணின் பெற்றோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணின் பெற்றோர் நடுரோட்டிலேயே மகேசை வெட்டி சாய்த்தனர்.இதில் மகேஷ் துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மகேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×