search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    காதலனின் பையில் வெடிகுண்டு... விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த காதலி
    X

    காதலனின் பையில் வெடிகுண்டு... விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த காதலி

    • இந்த சம்பவம் ஜூன் 26 ஆம் தேதி நடந்துள்ளது.
    • இந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து, மும்பை செல்லும் எனது காதலர் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இதனையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் அந்த நபரை தேட ஆரம்பித்தனர். அந்த நபரைக் கண்டுபிடித்ததும், அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர், ஆனால் வெடிகுண்டு எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

    இதை தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணும் அதே விமானநிலையத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த பெண்ணும் அவரது காதலரும் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு வெவ்வேறு விமானங்களில் புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் தனது காதலன் மும்பை செல்வதை அந்த பெண் விரும்பவில்லை. அதனால் தனது காதலனை பெங்களூரூவில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் ஏறாமல் தடுக்கவே அப்பெண் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இந்த சம்பவம் ஜூன் 26 ஆம் தேதி நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×