search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வடகிழக்கு பகுதிகளை வன்முறை, அராஜகத்தை நோக்கி தள்ளியது காங்கிரஸ் - அமித்ஷா தாக்கு
    X

    உள்துறை மந்திரி அமித்ஷா

    வடகிழக்கு பகுதிகளை வன்முறை, அராஜகத்தை நோக்கி தள்ளியது காங்கிரஸ் - அமித்ஷா தாக்கு

    • பா.ஜ.க தேசிய தலைவர் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இன்று அசாம் சென்றனர்.
    • அவர்கள் கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜ.க. மாநில அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இன்று சென்றனர்.

    அவர்கள் கவுகாத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜ.க. மாநில அலுவலகத்தை திறந்து வைத்தனர். அப்போது உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வடகிழக்கு பகுதிகளை வன்முறை மற்றும் அராஜகத்தை நோக்கி தள்ளியுள்ளது.

    இரண்டு முறை வெற்றி பெற்று பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்கும் என அப்போது நினைக்கவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் வடகிழக்குப் பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன என தெரிவித்தார்.

    Next Story
    ×