search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    iphone
    X

    பூ விற்கும் தனது தாயிடம் ஐபோன் கேட்டு 3 நாள் பட்டினி கிடந்த மகன் - வீடியோ

    • பூ விற்கும் தாய் ஒருவர் தனது மகனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    கோவிலுக்கு வெளியே பூ விற்கும் தாய் ஒருவர் தனது மகன் அடம்பிடித்ததால் அவருக்கு ஐபோன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    மொபைல்கடையில் ஐபோன் வாங்கிய மகன் மற்றும் அவரது தாயிடம் பேட்டி எடுத்துள்ளனர். அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் பேசிய அவரது அம்மா, "நான் ஒரு கோவிலுக்கு வெளியே பூ விற்கிறேன். என் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என அடம்பிடித்து 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. மகன் சாப்பிடாமல் இருந்ததால் அவனுக்கு நான் ஐபோன் வாங்குவதற்கு பணம் கொடுத்தேன். அந்த பணத்தை சம்பாதித்து தனக்கு திருப்பி தருமாறு என் மகனிடம் நான் கூறியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த மகனின் செயலை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    Next Story
    ×