search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மகளுக்கு கடிதம் அனுப்ப கற்றுத்தந்த தாய்- வீடியோ வைரல்
    X

    மகளுக்கு கடிதம் அனுப்ப கற்றுத்தந்த தாய்- வீடியோ வைரல்

    • வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வலைத்தளவாசிகளின் பாராட்டை அள்ளி உள்ளார்.
    • வீடியோவில் தாய், 10 வயதுடைய மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுத் தருகிறார்.

    கடிதம் எழுதுவது கடந்த காலம். ஆனால் இது இ-மெயில், வாட்ஸ்-அப் காலம். இன்ஸ்டாவிலும், ஸ்னாப்சாட்டிலும் அரட்டை அடிக்கிறது இன்றைய குழந்தைகள். அவர்கள் கடிதம் எழுதிப்படிப்பது பள்ளிப் பாடத்தில் மட்டுமே. அது அவர்களுக்கு விடுமுறை கடிதம் எழுதுவதற்குத்தான் பெரிதும் பயன்படுகிறது.

    ஆனால் உறவுமுறையை வளர்க்க ஒரு காலத்தில் கடிதம் மட்டுமே இருந்தது, அது அளவில்லா மகிழ்ச்சிப் பெட்டகமாக பாதுகாக்கப்பட்டது என்பதை இன்றைய குழந்தைகள் அறிய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கும், கடிதத்திற்கும் தொடர்பே இல்லை. அவர்கள் பயன்படுத்துவதும் இல்லை.

    இந்த நிலையில் ஒரு இந்திய பெண், தனது மகளுக்கு கடிதம் எப்படி எழுதுவது, அதை எப்படி அனுப்புவது என்பதை நேரடியாக விளக்கி மகளின் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வலைத்தளவாசிகளின் பாராட்டை அள்ளி உள்ளார்.

    வீடியோவில் தாய், 10 வயதுடைய மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுத் தருகிறார். பின்னர் இருவரும் தபால் நிலைய வாசலுக்கு வந்து இறங்குகிறார்கள். உள்ளே சென்று அஞ்சல் வில்லைகளை வாங்கி கடிதத்தில் ஒட்டுகிறார்கள். பின்னர் தபால் பெட்டிக்குள் கடிதத்தை சிறுமி போட்டுவிட்டு மகிழ்ச்சி புன்னகை பூக்கிறாள். அது மறுநாள் தாத்தாவுக்கு கிடைத்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்கிறாள். தாத்தா கடிதத்தை பிரித்து புன்னகையுடன் படிப்பதாக வீடியோ முடிகிறது. வீடியோவின் பின்னணியில் தாய் பேசும் காட்சி இணைக்கப்பட்டு உள்ளது. வீடியோ வைரலானது.


    Next Story
    ×