search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சந்திரயான்-3 லேண்டரை படம் பிடித்ததா சந்திரயான் 2 ஆர்பிட்டர்?
    X

    சந்திரயான்-3 லேண்டரை படம் பிடித்ததா சந்திரயான் 2 ஆர்பிட்டர்?

    • சந்திரயான்-2 ஆர்பிட்டர் சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது
    • லேண்டரை தரையிறக்க கூடுதலாக ஒரு வழி கிடைத்ததாக இஸ்ரோ தகவல்

    சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி, பிரக்யான் ரோவர் நிலவில் நடைபயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், தற்போதைய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது. இரு முனைகளில் இருந்தும் தகவல் பரிமாறப்பட்டது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், லேண்டரை தரையிறக்க தற்போது மேலும் ஒரு வழி கிடைத்துள்ளது என தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நிலவில் கால்பதிப்பதற்கு முன் (நேற்று முன்தினம்) ஆகஸ்ட் 23-ந்தேதி சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர், துல்லியமாக படம் எடுக்கும் கேமரா மூலம் படம் பிடித்ததாக ஒரு போட்டோவை இஸ்ரோ அப்டேட் செய்திருந்தது.

    ஆனால், அப்டேட் செய்த சில நிமிடங்களில் அதை நீக்கியுள்ளது. இதனால் சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த படம் உண்மைதானா? இஸ்ரோ அதை நீக்க என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Next Story
    ×