search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஆதித்யா எல் 1: விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது- இஸ்ரோ தகவல்
    X

    ஆதித்யா எல் 1: விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது- இஸ்ரோ தகவல்

    • தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும்.
    • ஆதித்யா எல் 1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

    பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் நேற்று புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    அதாவது, ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்கான லாக்ரேஞ்சு புள்ளி இருக்கும் இடத்திற்கு 4 மாத பயணத்திற்கு பின்னரே சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

    இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 5ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ஆதித்யா எல் 1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

    Next Story
    ×