search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடத்தியவரை விட்டு தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்த குழந்தை
    X

    கடத்தியவரை விட்டு தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்த குழந்தை

    • கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார்.
    • உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தன்னை கடத்தியவரை விட்டு தாயிடம் செல்ல மறுத்து 2 வயது குழந்தை கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. சுமார் 14 மாதங்களாக குழந்தை கடத்தியவருடன் வளர்ந்த நிலையில், தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்தது. பின் குற்றவாளியும் அழுதார்.

    ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிருத்வி என்ற 11 மாத குழந்தை கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தையை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த புதன்கிழமை அன்று குழந்தையையும், கடத்தியவரையும் கண்டுபிடித்தனர்.

    கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையை கடத்தியதாக கூறப்படுகிறது. கைதான தனுஜ் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். அவர் உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். ஆனால் தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தனுஜ் முன்பு உ.பி காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் இருந்தவர் என்பதால் போலீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்திருந்த அவர், தலைமறைவாக இருந்த காலத்தில் மொபைல் போனை பயன்படுத்தவில்லை.

    பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக அவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இருப்பினும் காவல்துறையினரின் தீவிர தேடலுக்குப் பிறகு தனுஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×