search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்: தேர்தல் கமிஷனர் ஆய்வு
    X

    ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்: தேர்தல் கமிஷனர் ஆய்வு

    • 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.
    • 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது. 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    ராஞ்சி:

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் குழு இன்று ஜார்க்கண்ட் சென்றது. 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.

    அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஜார்க்கண்டில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    2019-ம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. டிசம்பர் 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியானது.

    Next Story
    ×