என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
போன பிறவியில் அப்படி இருந்தோம்.. பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த யோகா ஆசிரியர்
- கர்நாடகாவில் கேவாலா என்ற அறக்கட்டளையை பிரதீப் உல்லால் என்ற யோகா ஆசிரியர் நடத்தி வருகிறார்.
- வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் கேவாலா அறக்கட்டளையை நடத்தி வரும் பிரதீப் உல்லால் (54) என்ற யோகா ஆசிரியர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். முந்தையை பிறவியில் நாம் இருவரும் உறவில் இருந்ததாக கூறி தன்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பெண் தனது புகாரில், "பஞ்சாப்பை சேர்ந்த நான் 2000 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தேன். பிரதீப் உல்லால் ஆன்லைனில் நடத்திய யோகா வகுப்புகளில் நான் கடந்த 5 ஆண்டுகளாக கலந்து கொண்டேன்.
அப்போது நாங்கள் இருவரும் கடந்த பிறவியில் உறவில் இருந்ததாக என்னை நம்ப வைத்து 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் என்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது நான் கருவுற்றேன், பின்னர் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்