search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விராட் கோலிக்கு சொந்தமான ஓட்டல் மீது சட்ட நடவடிக்கை - என்ன ஆச்சு தெரியுமா?
    X

    விராட் கோலிக்கு சொந்தமான ஓட்டல் மீது சட்ட நடவடிக்கை - என்ன ஆச்சு தெரியுமா?

    • ஓட்டல் மீது பெங்களூரு நகர காவல் துறை சட்ட நடவடிக்கை.
    • ஒன்8 கம்யூன் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. கிரிக்கெட் தவிர இவர் வேறு சில வியாபாரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விராட் கோலி இணை உரிமையாளராக இருக்கும் ஒன்8 கம்யூன் என்ற ஓட்டல் மீது பெங்களூரு நகர காவல் துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஓட்டல் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவில் ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    எனினும், இந்த ஓட்டலின் பார் நள்ளிரவு 1 மணியை கடந்தும் இயங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஒன்8 கம்யூன் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்8 கம்யூன் மட்டுமின்றி பெங்களூரு முழுக்க நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நேரம் சட்டவிரோதமாக இயங்கி வந்த பல்வேறு பார்கள் மீதும் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்ட ஒன்8 கம்யூன் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுக்க பல்வேறு முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பூனே மற்றும் கொல்கட்டா உள்ளிட்ட இடங்களிலும் கிளைகளை கொண்டுள்ளது.

    Next Story
    ×