search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுற்றுலா தலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
    X

    சுற்றுலா தலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

    • வெள்ளபெருக்கில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் யாரும் செல்லமால் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈபட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் உள்ள பூஷி அணைக்கு அருகே உள்ள அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்த வெள்ளபெருக்கில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 சிறுவர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், வெள்ளபெருக்கில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் சுற்றுலா வந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பம் சிக்கிய வீடியோ சமூக தளத்தில் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

    பூஷி அணைக்கு அருகே உள்ள அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தால் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என தடை செய்யப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் யாரும் செல்லமால் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈபட்டுள்ளனர்.



    Next Story
    ×