search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஆந்திராவுக்கும் கனமழை எச்சரிக்கை
    X

    காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஆந்திராவுக்கும் கனமழை எச்சரிக்கை

    • ஆந்திராவில் மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
    • 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது.

    திருப்பதி:

    வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு அருகில், விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் கரையைக் கடந்தது.

    இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த மழை பெய்தது. ஆந்திராவில் மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டியது.

    பல மாவட்டங்களில் 15 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதில் விஜயவாடா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிக ளில் தண்ணீர் தேங்க வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் உட்பட ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் வழியாக பாயும் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    ஆறு குளங்கள் ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் கயிறுகளை கட்டி மீட்டனர்.

    விஜய வாடா, மொகல் ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரண மாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரை மட்டமாகியது.

    இதில் வீட்டில் தூங்கிய வர்கள் மீது பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தொடர் மழையின் காரணமாக உப்பலாவில் ஆசிரியர் ராகவேந்திரா பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தனது காரில் மான்விக்,சவுரிஷ் என்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றார்.

    பாலத்தில் அதிக அளவு மழை வெள்ளம் சென்றதால் கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    மங்களகிரியில் கண்டாலய பேட்டை மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் நாகரத்தினம்மா என்பவர் இடிப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தார்.

    ஆந்திராவில் மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் ரெயில் தண்டவாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் விஜயவாடா-காசிபேட்டை மார்க்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரத்து செய்து மழை பாதிக் கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத் திலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஐதராபாத் உள்ளிட்ட நதரங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, கிராமங்க ளுக்கு இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இன்று தெலுங்கானாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் ஆந்திராவுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் அடுத்த 2 நாட்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.

    Next Story
    ×