என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
பெங்களூர் வந்த தன்னை கவர்னர், முதல்வர் வரவேற்காதது ஏன்? மோடி கூறிய விளக்கம்
- கூடியிருந்த பா.ஜனதா தொண்டர்கள், மக்களிடையே பிரதமர் மோடி பேச்சு
- விமான நிலையத்தில் கவர்னர், முதல்வர் வரவேற்க வரவில்லை
பிரதமர் மோடி கிரீஸ் நாட்டின் சுற்றுப் பணத்தை முடித்துக் கொண்டு ஏதென்ஸில் இருந்து நேற்று புறப்பட்டார். அவர் நேராக பெங்களூரு வந்தடைந்தார். சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூர் வந்துள்ளார்.
பெங்களூர் வருகை தந்த பிரதமர் மோடியை காண பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வெளியே அதிக அளவில் திரண்டு இருந்தனர். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்க கவர்னர், முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் மட்டும் வரவேற்றார்.
மோடியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
அதிகாலையில் என்னை பார்ப்பதற்காக கூடியிருக்கிறீர்கள். ஏதென்ஸில் பார்த்ததை போன்று இங்கே பார்க்கிறேன். நான் இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்க்க வந்திருக்கிறேன். அதனால் கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரிடம் என்னை வரவேற்க வரவேண்டாம் எனத் தெரிவித்தேன். முறைப்படி மாநிலத்திற்கு வருகை தரும்போது நடைமுறைப்படி கவர்னர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்க வந்தால் போதுமானது என்று தெரிவித்தேன்.
வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் உடனடியாக நான் இங்கு வரமுடியவில்லை. அதனால்தான் நாடு திரும்பியதும் உடனே இங்கு வந்துள்ளேன். இஸ்ரோ சாதனையை இன்னும் பெங்களூர் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால்தான் குழந்தைகயுடன் அதிகாலையிலேயே இங்கே வந்திருக்கிறீர்கள். என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்