search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஏதென்ஸில் இருந்து நேராக பெங்களூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி

    • கிரீஸ் சுற்றுப் பயணம் நேற்று முடிவடைந்து இந்தியா புறப்பட்டார்
    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்க இருக்கிறார்

    பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். நேற்று கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் புறப்பட்டார். வழக்கமாக அவர் டெல்லி வந்து இறங்குவார்.

    இந்தமுறை நேராக பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூர் வந்துள்ள பிரதமர் மோடி, சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் உரையாட இருக்கிறார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''சந்திரயான்-3 வெற்றியின் மூலம் இந்தியாவைப் பெருமைப்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் தொடர்புகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும்தான் விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளுக்குப் பின்னால் உள்ள உந்து சக்திகளாகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×