search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    rajastan lorry
    X

    ராஜஸ்தான்: வெள்ளப்பெருக்கில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட லாரி.. தப்பித்த ஓட்டுநர்

    • பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நிபோல் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பன்ஸ்வாரா மாவட்டத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் 202 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இதனால் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    பாலத்திற்கு மேல் ஆற்று நீர் சென்ற நிலையிலும் ஆபத்தை உணராமல் பல லாரிகள் பாலத்தை கடந்து வந்தன. அப்போது பாலத்திற்கு மேல் வந்த லாரி ஒன்று நீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

    அப்போது லாரி ஓட்டுனரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×