என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. பணவீக்கம்- பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
- சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்காததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
- பாராளுமன்ற மேல்சபையிலும் இதே பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 12-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
பாராளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதேபோல விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய வற்றுக்கு எதிராகவும் இரு அவைகளை முடக்கினர். இதேபோல் பாராளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் நேற்றில் இருந்து விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு எதிராக இன்றும் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தை முடக்கினார்கள்.
அவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்காததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற மேல்சபையிலும் இதே பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக மேல்சபையும் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மேல் சபையில் முன்னாள் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா எம்.பி.யாக பதவி ஏற்றார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியின் அமளி காரணமாக 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இரு அவைகளிலும் தொடர்ந்து எம்.பி.க்கள் விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை வைத்து இருந்தனர்.
பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு, பண வீக்கம், ஜி.எஸ்.டி. ஆகிய வற்றுக்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்