என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
திருப்பதி கோவிலில் தோஷம் நீங்க நடைபெற்ற சிறப்பு யாகம்
- இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு யாகம் பரிகார பூஜைகள் நடக்கிறது.
- நெய் சேமித்து வைக்கக்கூடிய இடம், லட்டு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு அங்கும் பூஜைகள் செய்யப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின்போது விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டுகள் பிரசாதத்தை விநியோகம் செய்ததற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
அப்போது கோவிலை சுத்தப்படுத்தி 3 நாட்கள் யாகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு யாகம் பரிகார பூஜைகள் நடக்கிறது.
ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கிணறு அருகே யாக சாலை அமைக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு பூஜைகள் தொடங்கியது.
காலை 10 மணி வரை சாந்தி ஹோமம் சிறப்பு யாகம் பரிகார பூஜைகள் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மகா சாந்தி யாகம் நடத்தினர். தேவஸ்தான அதிகாரிகள் ஜே.ஷியாமளா ராவ், வெங்கையா சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெய் சேமித்து வைக்கக்கூடிய இடம், லட்டு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு அங்கும் பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்