என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
கள்ளக்காதல் சந்தேகத்தால் நர்சின் கணவர் சதிச்செயல்- டாக்டர் சுட்டுக்கொலை வழக்கில் அம்பலம்
- கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை ஜாப்ராபாத் பகுதியில் இருந்து வாங்கியதாக சிறுவன் கூறியிருந்தான்.
- கொலையில் ஈடுபட்ட மேலும் ஒரு சிறுவனையும் தேடி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காளிந்தி குஞ்ச் பகுதியில் நிமா எனும் சிறிய ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த ஆஸ்பத்திரியில் ஜாவேத் அக்தர் என்பவர் நிமானி டாக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று அதிகாலை ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜாவேத் அக்தர், நர்சுகள் கஜலாபர்வீன், முகமது கமில் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு 2 சிறுவர்கள் சிகிச்சைக்கு வந்தனர். அதில் ஒரு சிறுவனின் கால் விரலில் கட்டு போடப்பட்டிருந்தது.
அதை அவிழ்த்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என சிறுவன் கூறினான். அவனுக்கு நர்சு கமில் கட்டுபோட்டார். பின்னர் அந்த சிறுவன் டாக்டர் ஜாவேத் அக்தரிடம் மருந்து சீட்டு வாங்க வேண்டும் என கூறி டாக்டரின் அறைக்கு சென்றான். அங்கு சிறுவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியில் டாக்டரை சுட்டுக்கொன்றான். பின்னர் அந்த சிறுவனும் அவனுடன் வந்த ஒரு மற்றொரு சிறுவனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொலை குறித்து தகவலறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாக்டர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.
இதில் சந்தேகத்திற்கிடமான ஒரு சிறுவனை போலீசார் அடையாளம் கண்டனர். அவனது இன்ஸ்டாகிராம் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுவன் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த புகைப்படத்துடன் சிறுவனின் பதிவில், 2024-ல் முதல் கொலை என்று பெருமையுடன் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சு ஒருவருடன் டாக்டர் ஜாவேத் அக்தர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அந்த நர்சின் கணவர் சந்தேகப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த நர்சின் மகளை இந்த சிறுவன் காதலித்து வந்துள்ளான். இதையறிந்த நர்சுவின் கணவர், டாக்டரை அந்த சிறுவன் மூலமாகவே கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
அந்த சிறுவனிடம் நர்சுவின் கணவர், நீ டாக்டரை கொன்றால் எனது மகளை திருமணம் செய்து வைக்கிறேன என உறுதி அளித்துள்ளார். இதை நம்பி அந்த சிறுவன் டாக்டரை சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் இந்த கொலைக்காக நர்சின் கணவர் அந்த சிறுவனுக்கு பணமும் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.
கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை ஜாப்ராபாத் பகுதியில் இருந்து வாங்கியதாக சிறுவன் கூறியிருந்தான். இதைத்தொடர்ந்து சிறுவனுக்கு துப்பாக்கி விற்றவரையும், அவனுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட மேலும் ஒரு சிறுவனையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்