என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
நாட்டிலேயே உயரமான 108 அடி ராமர் சிலை- மத்திய மந்திரி அமித்ஷா பணிகளை தொடங்கி வைத்தார்
- ஆந்திராவில் 108 அடி உயர ராமர் சிலையை அமைக்க அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
- ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் 500 கோடி ரூபாய் செலவில் 108 அடி உயர பஞ்சலோக சிலையாக இது உருவாகிறது.
திருப்பதி:
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஆந்திராவில் 108 அடி உயர ராமர் சிலையை அமைக்க அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள மந்ததிராலயத்தில் துங்கப்பத்ரா நதிக்கரையில் புகழ்பெற்ற ராகவேந்திரர் சாமி கோவில் உள்ளது. இந்த நகரில் பிரமாண்டமாக ராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம் 10 ஏக்கர் நிலத்தை ராமர் சிலை கட்டுவதற்காக நன்கொடையாக வழங்கியது. இதில் அழகிய பூங்கா அமைப்புடன் உலகிலேயே உயரமான 108 அடி உயர பஞ்சலோக ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.
ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் 500 கோடி ரூபாய் செலவில் 108 அடி உயர பஞ்சலோக சிலையாக இது உருவாகிறது.
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் வஞ்சி சுதார் இந்த சிலையை வடிவமைக்கிறார்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரமாண்ட ராமர் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த ராமர் சிலை பிரமாண்டமானது. இது மந்திராலயம் நகரத்தை பக்தி உணர்ச்சியுடன் மூழ்கடிக்கும், "நமது செழுமையான மற்றும் பண்பாடு நாகரீக உறுதிப்பாட்டில் மக்களைத் தளராமல் இருக்க ஊக்குவிக்கும்.
இந்த சிலை பிராந்தியத்தில் சனாதன மதத்தை பரப்புவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்து கலாச்சாரத்தில் 108 மிகவும் புனிதமான எண்.
2½ ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என அமித்ஷா தெரிவித்தார்.
விழாவில் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்