search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனவரி 31-ல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்: இரு அவைகளின் செயலகங்களும் அறிவிப்பு
    X

    ஜனவரி 31-ல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்: இரு அவைகளின் செயலகங்களும் அறிவிப்பு

    • பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
    • மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவுபெறுகிறது.

    புதுடெல்லி:

    பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி நிறைவு பெறும் என மக்களவை, மாநிலங்களவைகளின் செயலகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைந்த கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார்.

    பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவுபெறுகிறது.

    இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், "17-வது மக்களவையின் 11-வது தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடையும். இதைத் தொடர்ந்து, மார்ச் 13-ந் தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடும். பாராளுமன்றத்தின் அலுவல் நடவடிக்கைகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடையும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், 'டெல்லியில் வரும் 31-ந் தேதி மாநிலங்களவை கூடுவதற்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலங்களவையின் அலுவல் நடவடிக்கைகள் ஏப்ரல் 6-ந் தேதி நிறைவுபெறுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×