search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்தியபிரதேசத்தில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடிய மாணவி- கடத்தல் நாடகமாடியவரை போலீசார் மீட்டனர்
    X

    மத்தியபிரதேசத்தில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடிய மாணவி- கடத்தல் நாடகமாடியவரை போலீசார் மீட்டனர்

    • உஜ்ஜயினி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மாணவி ஒருவர் தனியாக இருந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடி, கடத்தல் நாடகம் ஆடியதாக தெரிவித்தார்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திடீரென்று கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

    இந்த நிலையில் மாணவி, தனது தந்தைக்கு போன் செய்து தான் ரிக்ஷாவில் ஏறியபோது ரிக்ஷா டிரைவர் தனது வாயை துணியால் பொத்தி மயக்க மடைய வைத்து கடத்தி சென்றதாக கூறினார்.

    சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடத்தல் காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை.

    இதற்கிடையே உஜ்ஜயினி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மாணவி ஒருவர் தனியாக இருந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடி, கடத்தல் நாடகம் ஆடியதாக தெரிவித்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

    Next Story
    ×