search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் வாலிபர் கைது
    X

    இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் வாலிபர் கைது

    • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வாலிபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து எந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று மாலை இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வாலிபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.

    விசாரணையில் அவரது பெயர் முகமது உஸ்மான் (வயது 30) என்பதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான கோட்லியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து எந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×