search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மேக் இன் இந்தியா திட்டத்தால் ஏற்றுமதி அதிகரிப்பு- பிரதமர் மோடி பெருமிதம்
    X

    மேக் இன் இந்தியா திட்டத்தால் ஏற்றுமதி அதிகரிப்பு- பிரதமர் மோடி பெருமிதம்

    • வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன்.
    • பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    'மேக் இன் இந்தியா' திட்டம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. 10-வது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும், திறன்களை உருவாக்குவதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இது வழிவகுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியதாவது:-

    மேக் இன் இந்தியா இன்று 10 ஆண்டுகளை கொண்டாடுகிறோம். இதை வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தத் திட்டம் நாட்டின் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்ற 140 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்குகிறது.

    பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×