search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ராகுல் காந்தி வழக்கு கடந்து வந்த பாதை
    X

    ராகுல் காந்தி வழக்கு கடந்து வந்த பாதை

    • அரசு பங்களவை விட்டு ஏப்ரல் 22-ந்தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு மார்ச் 27-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • அரசு பங்களாவில் உள்ள வீட்டை ராகுல் காந்தி ஏப்ரல் 14-ந்தேதி காலி செய்தார்.

    மார்ச்.23: மோடி குடும்ப பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

    மார்ச்.24: ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    மார்ச். 27: அரசு பங்களவை விட்டு ஏப்ரல் 22-ந்தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    ஏப்ரல்.3: இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார். 2 மனுக்களை அவர் தாக்கல் செய்தார்.

    ஏப்ரல்.13: இருதரப்பு வக்கீல்கள் வாதம் நடந்தது. இந்த வாதத்துக்கு பிறகு ராகுல் காந்தி மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று (ஏப்ரல் 20) ஒத்திவைக்கப்பட்டது.

    ஏப்ரல்.14: அரசு பங்களாவில் உள்ள வீட்டை ராகுல் காந்தி காலி செய்தார்.

    ஏப்ரல்.20: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரது 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    Next Story
    ×