search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில்
    X

    திருப்பதி கோவிலில் தெப்பக்குளம் ஒரு மாதம் மூடல்

    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    • தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் நீராடுவார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 65,874 பேர் தரிசனம் செய்தனர். 23,782 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் மாதம் 4-ந்தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாள் அங்குள்ள தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் நீராடுவார்கள்.

    வருகிற 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை குளத்தை தூய்மைப்படுத்துதல், குளத்தில் உள்ள சேற்றை அகற்றுதல், குழாய்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ஒரு மாதத்திற்கு கோவில் தெப்பக்குளம் மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×