search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதால் ஊரையே காலி செய்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற கிராம மக்கள்
    X

    பாதயாத்திரை சென்ற கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கிய காட்சி.

    நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதால் ஊரையே காலி செய்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற கிராம மக்கள்

    • வாக்கு எண்ணிக்கையில் நானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்தமாக ஊரை காலி செய்து விட்டு நேற்று நடை பயணமாக திருப்பதிக்கு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் புலி வர்த்தி வெங்கடமணி பிரசாத் என்கிற நானி வேட்பாளராக போட்டியிட்டார்.

    தேர்தலில் நானி வெற்றி பெற வேண்டும் எனவும், நானி தேர்தலில் வெற்றி பெற்றால் நடந்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவதாக தாமல செருவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊட்ல வங்க கிராம மக்கள் ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டனர்.

    வாக்கு எண்ணிக்கையில் நானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    தங்களது பிரார்த்தனை நிறைவேறியதால் ஏழுமலையானுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக ஊட்ல வங்க கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்தமாக ஊரை காலி செய்து விட்டு நேற்று நடை பயணமாக திருப்பதிக்கு சென்றனர்.

    நடைபயணமாக சென்ற கிராம மக்களுக்கு எம்.எல்.ஏ. நானியின் மனைவி புலிவத்தி சுதா ரெட்டி தாமல செருவில் அன்னதானம் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×