search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    திருப்பதியில் 2 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
    X

    திருப்பதியில் 2 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

    • சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
    • 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை.

    திருப்பதி:

    ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி 9 மற்றும் 16-ந் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனி வார ஆஸ்தானம் 16-ந் தேதி நடக்கிறது.

    இதனையொட்டி 9-ந்தேதி கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது . 9-ந்தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது . இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. எனவே 9-ந்தேதியும் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும் 16-ந் தேதியும் 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×