search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்காவில்  செட்டில்  ஆன பள்ளி ஆசிரியருக்கு 8 ஆண்டுகளாக மாத ஊதியம் கொடுத்து வந்த குஜராத் அரசு
    X

    கோப்புப் படம் 

    அமெரிக்காவில் செட்டில் ஆன பள்ளி ஆசிரியருக்கு 8 ஆண்டுகளாக மாத ஊதியம் கொடுத்து வந்த குஜராத் அரசு

    • குஜராத் அரசுத் தொடக்கப்பள்ளியில் பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார்.
    • வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புகார் அளித்துள்ளார்.

    குஜராத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தபடி கடந்த 8 ஆண்டுகளாக மாதந்தோறும் அரசு சம்பளம் வாங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசுத் தொடக்கப்பள்ளியில், பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார்.

    ஆனால் பாவனா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டதாகவும் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பருல் மெஹ்தா மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார்.

    அந்த புகாரில், அமெரிக்காவில் குடியேறிய பாவனா பட்டேல், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாத சம்பளத்தை பெற்று வருவதாகவும், அவர் முறையாக பள்ளிக்கு வராததால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரபுல் பன்சேரியா உறுதியளித்துள்ளார்.

    Next Story
    ×