search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட தேவையில்லை- `மெட்ரோ ஸ்ரீதரன் விளக்கம்
    X

    முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட தேவையில்லை- `மெட்ரோ' ஸ்ரீதரன் விளக்கம்

    • 125 ஆண்டுகள் பழமையானது முல்லைப் பெரியாறு அணை.
    • தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

    இதுதொடா்பாக கோழிக்கோடில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதரன் பேசியதாவது:

    முல்லைப் பெரியாறு அணை குறித்த தகவல்களை விக்கிபீடியாவில் படித்தேன். அப்போதுதான் அது கேரளத்தில் இருப்பதும் அதிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் வழங்கப்படுவதையும் தெரிந்து கொண்டேன்.

    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு தவறான புரிதல்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு 120 மீட்டருக்கும் பாதுகாப்பு தூண்களை அமைத்தும் சிறிய வாய்க்கால்களைக் கட்டமைத்து தண்ணீரை சேமிப்பதாலும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அணையை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

    எனவே, அங்கு புதிய அணை கட்டுவதைவிட ஏற்கெனவே உள்ள அணையை முறையாக பராமரிப்பதே போதுமானதாக இருக்கும் என்றாா்.

    முன்னதாக, பாராளுமன்றத்தில் அண்மையில் இந்த விவகாரத்தை எழுப்பிய இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ், முல்லைப் பெரியாறு அணை 'தண்ணீா் வெடிகுண்டு' போல் உள்ளது என்று குறிப்பிட்டாா்.

    அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த மத்திய இணைய மந்திரி சுரேஷ் கோபி அணை உடைந்தால் யாா் பொறுப்பு? என கேள்வி எழுப்பி இருந்தாா். ஆனால் அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்திருந்தாா்.

    2021 கேரள பேரவைத் தோ்தலில் பா.ஜ.க. சாா்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் தோல்வி அடைந்து, அரசியலை விட்டே விலகினார்.

    Next Story
    ×