search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    7 மாநிலங்கள், 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    7 மாநிலங்கள், 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது

    • உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்த தேர்தலில் உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    பீகாரில் ரூபாலி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ராய்காஞ்ச், ராணிகஞ்ச், பாக்தாத் மாணிக்தலா தொகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், மத்தியபிரதேசத்தில் அமர்வாரா, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலபிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் உட்பட பல புதுமுகங்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது.

    Next Story
    ×