search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மக்களை நேரடியாக சந்திப்பதால் குண்டு துளைக்காத காரில் யாத்திரை செல்ல முடியாது- ராகுல்காந்தி பேட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மக்களை நேரடியாக சந்திப்பதால் குண்டு துளைக்காத காரில் யாத்திரை செல்ல முடியாது- ராகுல்காந்தி பேட்டி

    • பா.ஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் நன்றி கூற விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு எதிர்க்கிறீர்களோ அவ்வளவு பயிற்சி பெறுகிறேன்.
    • எதிர்கட்சிகள் அனைத்தும் பொது பார்வையுடன் மக்களை அணுக வேண்டும்.

    புதுடெல்லி:

    ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல்காந்தி எம்.பி. பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து ராகுல் காந்தி இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொது மக்களை சந்திப்பதற்காகதான் நான் பாதயாத்திரை செல்கிறேன். காரில் அமர்ந்தபடி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்னால் செல்ல முடியாது.

    மக்களிடம் நேரடியாக சென்று பேச விரும்புவதால் குண்டு துளைக்காத காரில் செல்ல முடியாது.

    பா.ஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் நன்றி கூற விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு எதிர்க்கிறீர்களோ அவ்வளவு பயிற்சி பெறுகிறேன். யாத்திரையில் ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரசுடன் இருக்கிறார்கள். ஆனால் சில அரசியல் நிர்பந்தங்கள் இருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.

    எதிர்கட்சிகள் அனைத்தும் பொது பார்வையுடன் மக்களை அணுக வேண்டும். பா.ஜனதாவுக்கு எதிராக மாற்று பார்வையை திறம்பட எதிர்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×