search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தலைமை செயலரிடம் காங்கிரஸ் புகார்
    • விவகாரத்தில் தலையிட்டு கால்நடை பரா மரிப்பு துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பயனாளிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை செயலர் ராஜீவ்வர்மாவை சந்தித்து புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் கால்நடைதுறை மூலம் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வதாரத்திற்கு கறவை மாடு, ஆடுகள் வழங்கப்படு கிறது. 2022-23-ம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.2.3 கோடி நிதிஒதுக்கப்பட்டது. அதில் பயனாளிகள் தேர்வு வெளிப்படைத்தன்மை இல்லாமல் முறைகேடாக நடந்துள்ளது.

    தகுதியானவர்களுக்கு மானியம் வழங்கவில்லை. 40 கி.மீ தொலைவில் மின்னனு குறிச்சொல்லுடன் வாங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் பின்பற்றப்படவில்லை. அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு ஊழல் நடந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவினர் பயன்பெறும் வகையில் அரசியல் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு கால்நடை பரா மரிப்பு துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பயனாளிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், நீலகங்காதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
    • பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கேட் கீப்பரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் புதுச்சேரி-விழுப்புரம் மார்க்கத்தில் செல்கின்றன.

    இதில் புதன்கிழமை மட்டும் விழுப்புரத்தில் இருந்து 7 ரெயில்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 ரயில்கள் என 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இன்று காலை 9.55 மணிக்கு நியூ டெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டது.

    இதனிடையே இந்த ரெயில் சில வினாடிகளிலேயே சிக்னல் கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. புதுவை-கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பொதுவாக ெரயில்கள் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கேட் அடைக்கப்படுகிறது.

    இன்று காலை இந்த ரெயில் நீண்ட நேரம் ஆகியும் கேட்டை கடக்கவில்லை. இதனால் இந்த ெரயில்வே கேட் பகுதியில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ெரயில்வே கேட் எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் எதிர்பார்ப்புடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கேட் கீப்பரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் மாற்று பாதையில் செல்ல முடிவு செய்து புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் சுமார் அரை மணி நேரம் கழித்து சிக்னல் கிடைத்தது. அதன் பின் நியூ டெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இதயைடுத்து ெரயில்வே கேட்டுகள் அடுத்தடுத்து திறக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறமும் ஸ்தம்பித்த நிலையில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர்.இதனால் அந்த இடத்தில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சிக்கலான போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அந்த இடத்தில் மேம்பாலம் அமைத்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சந்திரப்பிரியங்காவை நீக்க முதலமைச்சர் ரங்கசாமி கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.
    • நீக்கப்பட்ட பின் சந்திரபிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை அவர் சந்திக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    புதுவை அமைச்சரவையில் பெண் அமைச்சராக என்ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரப்பிரியங்கா இருந்தார். கடந்த அக்டோபரில் அமைச்சரவையிலிருந்து சந்திரப்பிரியங்காவை நீக்க முதலமைச்சர் ரங்கசாமி கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.

    அதை அறிந்த சந்திரப்பிரியங்கா தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். சந்திரப்பிரியங்கா பதவி நீக்கம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த நிலையில், சந்திரப்பிரியங்கா தனது கணவரிடமிருந்து விவகாரத்துக் கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

    நீக்கப்பட்ட பின் சந்திரபிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை அவர் சந்திக்கவில்லை. இந்த நிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள்அமைச்சர் சந்திரப்பிரியங்கா நேற்று மாலை கோரிமேடு பகுதியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக சந்திரபிரியாங்கவிடம் கேட்டதற்கு, "எனது தொகுதியில் உள்ள கோவில்களில் ஒருகால பூஜைக்கான காசோலை பெற முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்தேன். அதன்படி அவரது அலுவலகத்துக்கு சென்று ரங்கசாமியை சந்தித்தேன்.

    • மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.
    • பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவை அரசு வழங்கியது.

    இதற்காக 11 இடங்களில் மத்திய சமையல் கூடங்கள் நிறுவப்பட்டது. இந்த நிலையில் 2018 முதல் அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து நவீன சமையல் கூடத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர காலையில் பால், வாரம் 3 முட்டை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    கவர்னர் ஒப்புதலை தொடர்ந்து டெண்டர் கோரியுள்ளோம். டெண்டர் பணிகள் முடிய 2 மாதங்களாகும். அதன்பிறகு ஜனவரி மாதம் இறுதியில் குடியரசு தினத்தில் சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். நாளுக்கு ஒரு தானிய பிஸ்கட் வழங்க திட்டமிட்டுள்ளோம். மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் முன்பு அவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கப்படும் என்றார்.

    • நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.
    • இருமல், சுவாச பாதிப்பு போன்றவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தல்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொதுஇடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துகொள்ள பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும். இருமல், சுவாச பாதிப்பு போன்றவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீசாருடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
    • புதுவையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து

    புதுச்சேரி:

    மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.

    இதன்படி நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்கள் நடந்தது. புதுவையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தொழிற் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் கூட்டாக அறிவித்திருந்தனர்.

    இந்த போராட்டத்தை விளக்க 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கோரிக்கை விளக்க பிரசாரமும் நடத்தினர்.தொழிலாளர்கள், மக்கள் விரோத மத்திய மோடி அரசு வெளியேற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள், எந்திரங் கள் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட் கள், கியாஸ் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். அமைப்பு சாரா நலவாரியத்தை நிதிஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.

    உணவு பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளித்து, ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். மின்சார மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

    பிரீபெய்டு மீட்டர்களை பொருத்தக்கூடாது. 200 நாள் வேலை வழங்கி நாள்தோறும் ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று போராட்டம் நடந்தது.

    காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கு அருகே அனைத்து தொழிற் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் திரண்டனர். அங்கிருந்து கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.

    ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.சி.சி.டி.யு. பொதுச் செயலாளர் புருஷோத்தமன், எல்.எல்.எப். செயலாளர் செந்தில், என்.டி.எல்.எப் செயலாளர் மகேந்திரன், எம்.எல்.எப். செயலாளர் வேதா வேணுகோபால், விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கீதநாதன், தமிழ்ச்செல்வன், சங்கர், ரவி, விஜயபாலன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில், ஏ.ஐ.டி.யூ.சி. அபிஷேகம், அந்தோணி, தயாளன், சந்திரசேகரன், சி.ஐ.டி.யூ. பிரபுராஜ், முருகன், கொளஞ்சியப்பன், ரவிச் சந்திரன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி, சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சோ. பாலசுப்பிர மணியன், மோதிலால், விஜயா, எல்.எல்.எப். துரை ஜெயக்குமார், எம்.எப்.எல். மாசிலாமணி, என்.டி.எல்.எப். சரவணன் உட்பட நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

    ஊர்வலம் நேருவீதி, காந்திவீதி சந்திப்பில் வந்தபோது பேரிகார்டு களை வைத்து போலீசார் தடுத்தனர். இதனால் போலீ சாருக்கும், தொழிற்சங்கத் தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தங்களை ஆம்பூர் சாலை வரை அனுமதிக்க வேண்டும் என போலீசாரு டன் தொழிற்சங்கத்தினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். பேரிகார்டுகளின் மீது ஏறி போலீசாரை தாண்டிச் செல்ல முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர். 300-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்ட னர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • நாராயணசாமிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் சவால்
    • பதில் சொல்ல அவசியமில்லை

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று நிருபர் களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த அரசு மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டு களுக்கு ஆதாரம் இருந்தால் சி.பி.ஐ. வசம் புகார் செய்யலாம். சி.பி.ஐ. மீது நம்பிக்கை இல்லாவிட்டால் கோர்ட்டிற்கு செல்லலாம். அவர் முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்திக்கட்டும். அதன்பின் ஜனாதிபதியை சந்திக்கட்டும்.

    அவருடைய குற்றச்சாட்டு களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாராயணசாமி எதற்கெடுத்தாலும், எல்லோரையும் ராஜினாமா செய்யுங்கள் என்கிறார். அவர் கூறுவதை பார்த்தால் யாருமே பதவியில் இருக்க முடியாது.

    புதுவை அரசின் எந்த திட்டங்களுக்கும் தடை ஏதும் இல்லை. முதல்-அமைச்சரின் திறமையான நிர்வாகத்தால் அனைத்து நலத்திட்டங்களும், திட்டங்களும் நிறை வேற்றப்பட்டு வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம், கியாஸ் மானியம், முதியோர் உதவித்தொகை, மீனவர்கள், விவசாயிகள் நிவாரணம் என எந்த திட்டத்திலும் தடையில்லை.

    வாரத்துக்கு ரூ.20 கோடிக்கு மாநிலம் முழுவதும் பணிகள் நடக்கிறது. பள்ளி கட்டிடம் சீரமைப்பு, புதிய கல்லூரிகள் கட்டுவது, சாலை, கால்வாய், வாய்க்கால் மேம்பாட்டு பணி கள் நாள்தோறும் நடந்து வருகிறது. எந்த திட்டமும் முடங்கவில்லை.

    ஒரு அரசி யல்வாதியை தவிர வேறு யாரும் இந்த அரசை பற்றி குறைகூற வில்லை. நெடுஞ்சாலை களில் டோல்கேட் அமைக்கும் போது உள்ளூர் மக்களுக்கு சலுகை அளிப்பார்கள்.

    விழுப்புரத்திலிருந்து, நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதில் ஒரு இடத்தில் தான் புதுவைக்கான டோல்கேட் அமைக்கப்பட உள்ளது. இதற்கு உள்ளூர் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். ஒருவேளை அதில் சிக்கல் இருந்தால் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    இந்த சாலையில் 60 முதல் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. புதுவையிலிருந்து, விழுப்புரம் செல்லும் சாலையில் கண்ட மங்கலம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மட்டும் நடக்க வேண்டும். இது ப்ரீகாஸ்ட் அடிப்படையில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை பணிகள் முடிந்தால் விழுப்புரத்திற்கு சுமார் 35 நிமிடத்தில் செல்ல முடியும்.

    விழுப்புரத்தை தாண்டி திருச்சிக்கு சுமார் 2 மணி நேரத்தில் செல்லலாம். இதனால் வாகனங்களின் எரிபொருளில் சேமிப்பு ஏற்படும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது.

    புதுவையில் ஒட்டுமொத்த மாக 3½ லட்சம் ரேஷன்கார்டு கள் உள்ளது. ஆனால் 9¾ லட்சம் வாகனங்கள் உள்ளது. இதனால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்கியமான நேரங்களில் மரப்பாலத்தில் மட்டும் 17 ஆயிரம் வாகனங்கள் கடப்பதாக கணக்கிடப்பட்டு ள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தலைமையில் போக்குவரத்து துறையில் பல கமிட்டிகள் உள்ளது. இந்த கமிட்டி பரிந்துரை களை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.

    ராஜீவ்காந்தி சிலையி லிருந்து இந்திராகாந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க டெண்டர் ஜனவரி மாதம் கோரப்படும். இந்த பாலம் 30 அடி உயரத்தில் அமைய உள்ளது. அடுத்த கட்டமாக மரப்பாலம் பகுதியில் பாலம் அமைக்க வும் திட்டமிட்டு ள்ளோம். கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் வரை 8 அடிக்கு சாலையை அகலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலம் கடந்த சில வருடங்களாக கஞ்சா விற்பனை கேந்திரமாக திகழ்ந்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. நேற்று முன்தினம் சுமார் 45 கிலோ அளவிலான கஞ்சாவை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

    இதில் கைது செய்யப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த ஷாருக்கான் தேடப்படும் குற்றவாளியான முதலியார் பேட்டை நயினார் மண்டபத்தை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் அரசியல் கட்சிக்கு வேண்டியவர்கள்.

    இவர்களை விடுவிக்க பகீரங்க முயற்சி நடக்கிறது. பிடிபட்ட 45 கிலோ கஞ்சா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவில் உள்ள மொத்த வியாபாரி மூலம் தமிழகத்தில் உள்ள கஞ்சா கடத்தல் பேர்வழிகள் வழியாக புதுவையில் கஞ்சா விற்பனை செய்யும் நபருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதில் 4 மாநிலத்தை சேர்ந்த கஞ்சா விற்பனை யாளர்கள் சம்பந்தப் கட்டுள்ளனர். எனவே விசாரணையை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்த டி.ஜி.பி. பரிந்துரைக்க வேண்டும்.

    கஞ்சா குற்றவாளிகள் மீது தேசிய சட்டத்தின் கீழ் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை கேந்திரமாக மாறுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சம்பத் எம்.எல்.ஏ., சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சரோஜா பாபு, துணை முதல்வர் மதிவாணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.
    • கையெழுத்து இயக்க பெட்டியில் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தி.மு.க. நகர செயலாளரும், கோட்டக் குப்பம் நகர் மன்ற தலை வரு மான எஸ்.எஸ் ஜெயமூர்த்தி தலைமையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதன் ஒரு பகுதியாக கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே 'நீட் விலக்கு நம் இலக்கு' கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் வினோபாரதி முன்னிலை யில் மருத்துவம் படிக்கும் மாணவ-மாணவி கள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் தமிழ்நாட்டில் நீட் விலக்கு வேண்டி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் கையெழுத்து இயக்க பெட்டியில் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

    • மருத்துவக் கல்லூரிகளில் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
    • பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஜிப்மர் உள்ளிட்ட 5 மருத்துவக் கல்லூரிகளில் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பள்ளியின் தாளாளர் பிரடரிக் ரெஜிஸ் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ரீட்டா பிரடரிக், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, பள்ளியின் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

    புதுச்சேரி்:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் புதியதாக உயர்தர மின் கேபிள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாடுகளை போக்கிட ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

    இதற்கான பூமி பூஜையை உப்பளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் முத்தானந்தம் , இளநிலை பொறியாளர் சுரேஷ் , ஒப்பந்ததாரர் சுகுமாரன் , தி.மு.க நிர்வாகிகள் ரவி, தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், நிசார், காங்கிரஸ் சொக்கலிங்கம், தி.மு.க நிர்வாகிகள் நோயல், ராஜி, விநாயகமூர்த்தி, சந்துரு, அஜித்ராஜீ, காளியம்மாள், கோமுகி, விடுதலை சிறுத்தை கட்சி கற்பகம், மாயவன், வீரப்பன், அசோக், அன்வர், ரவிகுமார், காளப்பன், ராகேஷ், சுகுமார், சங்கரநாராயணன், மணி, மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ×