search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 2 வாலிபர்கள் கைது
    • 5 மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூரில் தனியார் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் நேற்று மாலை வீடு திரும்பும் போது அனைவரும் ஒன்றாக கைகோர்த்தபடி சென்றனர்.

    அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் ஹாரன் அடித்தும் வழிவிடாமல் மாணவர்கள் சுவராஸ்யமாக பேசிக்கொண்டு சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவர்கள் மாணவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். இதில் 5 மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை நாகராஜன் திருக்கனூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் களான திருக்கனூரை சேர்ந்த ரியாஸ்(24), திருமால்(24) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருக்கனூரில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

    • விதவிதமான உணவுகள் என செய்து அசத்தி கொண்டாடுகின்றனர்.
    • புதிய வகை ரக பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    தீபாவளி என்றாலே புதிய ஆடை, இனிப்பு , காரம், விதவிதமான உணவுகள் என செய்து அசத்தி கொண்டாடுகின்றனர்.

    அதோடு ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பட்டாசுகள் புதிய ரகங்கள் அறிமுகம் செய்வது வழக்கம்.இந்த முறை அதேபோன்று பல்வேறு புதிய வகை ரக பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு புதிதாக லியோ பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது. லியோ துப்பாக்கி, லியோ கிப்ட் பாக்ஸ் இந்த புதிய ரகம் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மஞ்சள் நிறத்தில் ரெடிமேடாக வெடி பொருத்திய பிளாஸ்டிக் தோட்டாவுடன் வந்துள்ளது. இதன் டிரிக்கரை அழுத்தினால் வெடிக்கும்.

    லியோ துப்பாக்கியை விற்பவரும் வாங்கியவரும் விஜய் படத்தில் துப்பாக்கிய தேய்ப்பது போல் தேய்த்து சுட்டு தங்களது குதுகலத்தை வெளிபடுத்துகின்றனர்.இதோடு மற்றொரு புதிய அறிமுகமாக டீன் பீர் வெடி. பல வண்ணத்தில் வந்துள்ளது.

    புதிய ரகங்களான மோட்டு பட்லு, கொரோனா, பாப்கார்ன், சூரியகாந்தி பூ,ட்ரோன், லேசர் ஷோ கோலிசோடா, காளான், மேஜிக் பஸ், சாட் சாட், கிராண்ட் சலாம்,வட்ட வடிவில் தொடர்ந்து 15 நிமிடம் வெடிக்கக் கூடிய கிராண்ட் ஸ்லாம், முதல் முறையாக 20 ஆயிரம் வாலா பட்டாசு, 4 அடி உயரத்தில் கம்பி மத்தாப்பு போன்ற எண்ணற்ற வகைகள் வழக்கம் போல் அணிவகுத்துள்ளன.




    • கவர்னர் தமிழிசை பேட்டி
    • தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு கொடுக்க வலியுறுத்தி யுள்ளோம். தொழிற்சாலை யின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும். தொழிற்சாலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன? சுற்றுச்சூழல் பாதிக்கப்படு கிறதா? என அறிக்கை கேட்டுள்ளோம்.

    அது வந்தவுடன் மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்கப்படும். மக்கள் பாதிக்கப்பட்டால் அதை மீறி எந்த நிறுவனமும் நடத்த முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.

    தொழிற்சாலையை மூடுவது எளிது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    தெலுங்கானாவில் தேவைப்படும் நேரத்தில் முதல்-அமைச்சர் கவர்னரை சந்திப்பது இல்லை. கோப்புகளில் தெளிவுக்குக்கூட கேட்க முடியாத நிலை உள்ளது. இதை சுப்ரீம்கோர்ட்டில் தெளிவு படுத்தியுள்ளோம்.

    ஆனால் புதுவையில் சரியாக நடக்கிறது. என்னை பொறுத்தவரை நான் பொறுப்பாக நடந்து கொள்கிறேன். நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர். புதுவை, தெலுங்கானாவில் இதுவரை மக்களுக்கா கத்தான வேலை செய்கிறேன்.

    தெலுங்கானாவில் கவர்னருக்கு புரோட்டோ கால் தருவதில்லை. கொடி யேற்ற விடுவதில்லை, கவர்னர் உரை இல்லை. இதையெல்லாம் யார் கேட்பது? எல்லா விதத்தி லும் நாங்கள் வெளிப்படை த்தன்மை யோடு இருக்கிறோம். என்னை பொறுத்தவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.

    வேகமாக, தன்னிச்சை யாக வேலை செய்கிறேன் என குற்றம்சாட்டுங்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லா தீர்கள். மிகப்பெ ரிய டாக்டராக இருந்து வந்த நான் நேர்மை யாகவே செயல்படுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தீபாவளி நேரத்தில் மக்கள் அச்சம்
    • பாகூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி இல்லாமல் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 8 தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் முக்கிய பகுதிகளில் ஒன்றான பாகூரிலும் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பாகூர், அரங்கனூர், கிருமாம்பாக்கம், கன்னியாகோவில், மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், கரையாம்புத்தூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பாகூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தான் தீயணைத்து வருகின்றனர்.

    பாகூரை சுற்றி உள்ள பகுதிகளில் குடிசை வீடுகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், தென்பெண்ணை ஆறு, ஏரி, குளங்கள் என அமைந்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள், ஆற்றில் சிக்கும் இளைஞர்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணியை மேற்கொள்ளப்பட்டு தீயணைப்பு துறையினரே மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனால் பாகூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி இல்லாமல் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தீயணைப்பு நிலைய அதிகாரியாக இருந்த பக்கிரி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்று 6 மாதங்கள் ஆகியும் இதுவரை நிலைய அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது.

    தற்போது தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்தப் பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளனர்.

    பாகூர் பகுதியில் இந்த தீபாவளி பண்டிகை நாளில் அசம்பாவிதம் ஏதேனும் பெரிய அளவில் நடக்கும் முன் நிலைய அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மத்திய அரசின் பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது.
    • பயிர் காப்பீடு விண்ணப்பங்களை உழவர் உதவியகம் மூலம் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், மணிலா, கரும்பு, பருத்தி, வாழை காப்பீடு செய்யப்படுகிறது.

    இயற்கை இடர்பாடுகளுக்கு காப்பீடு பிரீமியத்தொகை முழுவதை யும் அரசே செலுத்துகிறது.

    ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை உழவர் உதவியகம் மூலம் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • பள்ளித்தலைவர் இருதயமேரி வரவேற்று பேசினார். தாளாளர் இராஜராஜன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல் நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியருக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    சுற்றுசூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வழி நடத்துதலின் படி மாணவர்களுக்கு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற செய்தி அறியுறுத்தப்பட்டது.

    பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டது. பள்ளி முதல்வர் நீலம் அருள்செல்வி சிறப்புரையாற்றினார். பாகூர் தீயணைப் நிலையத்தி லிருந்து வீரர்கள் நகேஷ்வரராவ், ராஜவேலு மற்றும் பாலசந்தர் கலந்துகொண்டு, பட்டாசு வெடிக்கும் போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை எவை என்று எடுத்துரைத்தனர்.

    பள்ளித்தலைவர் இருதயமேரி வரவேற்று பேசினார். தாளாளர் இராஜராஜன் முன்னிலை வகித்தார்.

    துணை முதல்வர் அன்புசெல்வி மாணவர் களை தீபாவளி உறுதிமொழி எடுக்கச்செய்தார்.

    • மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
    • அரசின் தொழிலாளர் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் தொடர் ஆய்வுகள் நடத்தி தொழிலாளர்கள், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை காலாப்பட்டு தொழிற்சாலையில் ஏற்பட்ட மோசமான விபத்துக்கு நிர்வாகமே காரணம். அரசின் தொழிலாளர் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் தொடர் ஆய்வுகள் நடத்தி தொழிலாளர்கள், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

    புதுவை அரசு தற்போது கலெக்டர் தலைமையில் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில், தொழிலாளர்துறை ஆய்வா ளர்கள், தொழிற்சாலை ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், குற்றம் இழைத்தவர்கள் மீது முழுமையாக நடத்தப்பட வேண்டும்.

    வெளிப்படையாக உண்மை நிலையை வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தொழிற்சாலையை முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் தலைமையில் குழு அமைத்து முழு விசாரணை நடத்த வேண்டும்.அதுவரை அந்த தொழிற்சாலையை இயக்க அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா.
    • தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா. இவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் கீழ் புறத்தில் வெல்டிங்க் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மற்ற பகுதி மற்றும் மற்ற படங்களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் .ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • புதுவையில் நடந்த சோதனையில் எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த வடமாநில வாலிபர் பாபுவை கைது செய்தனர்.
    • 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    சட்ட விரோதமாக வெளிநாட்டினரை இந்தியாவில் பணியமர்த்தியதாக வந்த புகாரை தொடர்ந்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 44 இடங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவையில் நடந்த சோதனையில் எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த வடமாநில வாலிபர் பாபுவை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து போலி ஆதார் கார்டு, உயர்ரக செல்போனை பறிமுதல் செய்தனர்.

    அவரை சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். கூட்டாளிகள் சிக்கினர்

    அவர் கொடுத்த தகவல்படி பாபுவுடன் ஒரே அறையில் தங்கி இருந்த மேலும் 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொல்கத்தாவை சேர்ந்த ஆரிப்ஷோக் (வயது 20), லால்கோலா பகுதியை சேர்ந்த சதீம் ஷீக் (30) என்பதும், கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது 160 கிராம் அளவில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தார்.

    அவர்கள் வேறு ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர்.
    • ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். தொழிற்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும். தொழிற்சாலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன? சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? என அறிக்கை கேட்டுள்ளோம்.

    அது வந்தவுடன் மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்கப்படும். மக்கள் பாதிக்கப்பட்டால் அதை மீறி எந்த நிறுவனமும் நடத்த முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.

    தொழிற்சாலையை மூடுவது எளிது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    தெலுங்கானாவில் தேவைப்படும் நேரத்தில் முதல்-அமைச்சர் கவர்னரை சந்திப்பது இல்லை. கோப்புகளில் தெளிவுக்குக்கூட கேட்க முடியாத நிலை உள்ளது. இதை சுப்ரீம்கோர்ட்டில் தெளிவு படுத்தியுள்ளோம்.

    ஆனால் புதுவையில் சரியாக நடக்கிறது. என்னை பொறுத்தவரை நான் பொறுப்பாக நடந்து கொள்கிறேன். நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர். புதுவை, தெலுங்கானாவில் இதுவரை மக்களுக்காகத்தான வேலை செய்கிறேன்.

    தெலுங்கானாவில் கவர்னருக்கு புரோட்டோ கால் தருவதில்லை. கொடி யேற்ற விடுவதில்லை, கவர்னர் உரை இல்லை. இதையெல்லாம் யார் கேட்பது? எல்லா விதத்திலும் நாங்கள் வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறோம். என்னை பொறுத்தவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.

    வேகமாக, தன்னிச்சையாக வேலை செய்கிறேன் என குற்றம்சாட்டுங்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள். மிகப்பெரிய டாக்டராக இருந்து வந்த நான் நேர்மையாகவே செயல்படுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
    • இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழலையும், சுனாமி குடியிருப்பு மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காப்பாற்றிட வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு, (கிழக்கு) மாவட்ட செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை அ.தி.முக. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்துக்கு காரணமான அந்த வாகன காண்ட்ராக்டர் யார்? அவர் திட்டமிட்டு அந்த விபத்தை ஏற்படுத்தினாரா? என்பது குறித்தும், அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக விபத்தை ஏற்படுத்தி அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே அவர்களின் உடல் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் இங்கிருந்து 4 மணி நேரம் மரண அவஸ்தையுடன் நோயாளிகளை சிகிச்சைக்கு அரசின் அனுமதியோடு கொண்டு சென்றனரா? அவ்வாறு கொண்டு செல்ல அதிகாரம் அளித்தது யார்? போகும் வழியிலேயே ஒரு நோயாளி மரணமடைந்திருந்தால் அதற்கு பொறுப்பு யார்?

    ஜிப்மர் டாக்டர்கள் மறுத்தும் சென்னைக்கு கொண்டு சென்றது சம்பந்தமாக மருத்துவ புலனாய்வு நிபுணர்களை கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர், கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கலெக்டர் வல்லவன் அனுமதி
    • சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் நகர், புறநகர், கிராமப்புறங்களில் என 15-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. தியேட்டர்களின் பராமரிப்பு உட்பட பல்வேறு காரணங்க ளால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என புதுவை அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் வல்லவன் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் எலைட், பால்கனி, டீலக்ஸ் வகுப்புகளுக்கு ரூ.170, பிரீமியம் வகுப்புகளுக்கு ரூ.130 கட்டணமாக நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற ஏ.சி. தியேட்டர்களுக்கு பாக்ஸ் ரூ.180, எலைட், பால்கனி, டீலக்ஸ், ரூ.170, முதல் வகுப்பு ரூ.130, 2-ம் வகுப்பு ரூ.100, 3-ம் வகுப்பு ரூ.60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    ×