search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எதிர்பார்ப்பும் வேண்டாம்; ஏமாற்றமும் வேண்டாம்!
    X

    எதிர்பார்ப்பும் வேண்டாம்; ஏமாற்றமும் வேண்டாம்!

    • முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது ஏமாற்றம் என்ற வலி இருக்காது.
    • மற்றவரை நடத்தும் விதத்தில் இருந்தே ஒருவரை நாம் கணித்து விட முடியும்.

    இதை எல்லாம் செய்கிறீர்களா?

    * நீங்கள் ஒருவரிடம் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறீர்கள். அவர் பாதி பதில் கூறி மீதியினை கூற முற்படும் போது அவசரப்படாதீர்கள். வேகமாய் குறுக்கிடாதீர்கள். அவர் முழுமையாய் சொல்லட்டும் அல்லது முயற்சியாவது செய்யட்டும். அதற்குள் படபடவென பேசி அவரது தன்னம்பிக்கையினை குலைத்து விடாதீர்கள். அப்படி செய்தால் அது அவரது வாழ்வினை கொலை செய்வதற்குச் சமமாகும்.

    * ஒருவருக்கு அவரது பெயர் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆகவே பெயர் சொல்லி கூப்பிடக் கூடிய உறவுகளை, நட்புகளை அவர்களது பெயரை சொல்லி கூப்பிடுங்களேன்.

    * எதிர்பார்ப்பு இல்லாமல் படிப்போ, வேலையோ, உதவியோ எதுவாயினும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது ஏமாற்றம் என்ற வலி இருக்காது.

    * ஒருவர் மற்றவரை நடத்தும் விதத்தில் இருந்தே அவரை நாம் கணித்து விட முடியும்.

    * பலருக்கு பிடித்த ஒரே பேச்சு அவர்களைப் பற்றி அவர்களே சுய தம்பட்டம் அடித்து கொடியேற்றி பறக்க விடுவதுதான். அனைவரும் இந்த பழக்கத்தினை விட்டு விடுவோமாக.

    * முடிந்தவரை பிறரை எந்த உதவியும் கேட்காது இருப்பது நமக்கு கடவுள் கொடுத்த அதிர்ஷ் டம் தான். ஆனால் அதனையும் மீறி ஒருவரிடம் ஒரு உதவி கேட்க நேரிடும் போது எனக்கு பண உதவி தேவை என்று சொல்வ தினை விட 'வணக்கம்' என கை கூப்பி கூறுவதே சிறந்தது. என்றாலும் எனக்கு இந்த உதவி தேவை. ஏனென்றால்....

    * என் பிள்ளைக்கு பணம் கட்ட வேண்டும்

    * என் தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்று சுருக்கமான முறையில் காரணத்தினையும் கூறுங்கள்.

    * சத்தமாக, வேகமாக, படபடவென்று பேசுவது எதற்காகவோ நீங்கள் அச்சப்படுவது போல் இருக்கும்.

    * நிதானமாய், அமைதியாய் பேசுவது உங்கள் தன்னம்பிக்கையினை காட்டும்.

    * கேள்வியை முடிப்பதற்குள் அடித்து, பிடித்து, குறுக்கிட்டு பதில் சொல்வது அநாகரீகம் மட்டுமல்ல. உங்கள் மனமும், சொல்லும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனைக் காட்டும்.

    * வாயைத் திறந்து, தட்டி, உருண்டு சிரிப்பது என அடிக்கடி அல்லது எப்போதும் இப்படி செய்தால் கொஞ்சம் கூட மனக் கட்டுப்பாடு இல்லை என்பதனை வெளிப்படுத்தும். உங்கள் கண்கள் சிரித்தாலே போதும். அழகாய், மென்மையாய் காட்டும்.

    * அதற்காக பிரச்சினைகள் வரும்போது அமைதியாய், மென்மையாய் இருக்க முடியாது. உண்மையான உங்கள் பேச்சினை சொல்லத்தான் வேண்டும். அதற்காக கத்த, கூச்சலிட வேண்டாம். நீங்கள் கண்ணாடி அல்ல நொறுங்குவதற்கு. இரும்பு, வளைக்க முடியாத இரும்பு. இந்த மனநிலை அன்றாடம் தியானம் செய்பவருக்கும், உடற்பயிற்சி செய்பவருக்கும் இருக்கும்.

    இவை அனைத்தும் ஒருவரைப் பற்றி முழுமையாய் நீங்கள் அறிந்து கொள்வதற்கும், நீங்கள் வாய் திறந்து பேசாமலே உங்கள் கருத்தினை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கும் உதவும்.

    பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது

    பல இளம் வயதினர் தங்கள் இளம் வயதினில் ஏற்பட்ட பாதிப்புகளால் பலவாறு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பயம், முரட்டுத்தனமான நடவடிக்கை என பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர்.

    * சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் பீதி அடைகின்றனர். எப்போதும் பட படப்புடன் இருக்கின்றனர். இவர்களால் சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

    * துணிவு இருக்காது. எதற்கும் பயந்து உள்வாங்கி விடுவார்கள்.

    * பொது நிகழ்வுகளில் பங்கேற்க கூட மாட் டார்கள்.

    * தூங்கி எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை டென்ஷனாக மட்டுமே இருப்பார்கள்.

    * தனக்குத் தானே பாதிப்புகளை ஏற்ப டுத்திக் கொள்வார்கள். ஆக பெற்றோர்களே, பிள்ளைக்கு சொத்து கொடுப்பது பெரிய முக்கியம் அல்ல. அவர்கள் மீது உரிய கவனத்தினை கொடுத்து மன நலத்தோடு வளர்ப்பதே சிறந்த செயல்.

    நம்மை பாதிக்கும் சில நபர்கள்

    * சில பேரை கவனித்து இருக்கின்றீர்களா? சாதாரண விஷயங்களுக்கு கூட ரொம்ப கஷ்டம் போல் டிராமா போடுவார்கள். அவர்கள் வந்தாலே அவர்களது புலம்பல் நம்மை சக்தியற்று ஆக்கிவிடும். கண்டிப்பாக இத்தகு மனிதர்களை தவிர்த்துவிட வேண்டும்.

    * சில நபர்கள் எந்த இடத்திற்கு வந்தா லும் சரி அந்த இடத்தில் ஆக்கப்பூர்வமாக நடக்கும் வேலைகளில் ஏதோ குற்றம், குறை கூறி அந்த வேலையினை செய்பவர்களை குலை நடுங்க செய்து விடுவார்கள். மூளை, சிந்தனை, செயல் என அனைத் திலும் நெகடிவ் மட்டுமே இருக்கும். நன்றாக இருக்கும் ஒருவர் வாழ்வினை சீரழிக்க இவர்கள் மட்டுமே போதும். இவர்களை கண்டால் ஓடி விடுங்கள்.

    * சில நொடி கூட வாய் மூடாது பேசியே அடுத்தவரின் மண்டையினை குடைந்து விடுவார்கள். இவர்கள் போன பிறகு அடுத்தவர் சக்தி இன்றி சுருண்டு விடுவார். இது நமக்குத் தேவையா?

    * சிலர் ஊர் வம்பின் மொத்த உருவமாய் இருப்பார்கள். அவர்களை பார்த்தால் காதில் பஞ்சினை வைத்து அடைத்து ஒரு ஓட்டம் பிடியுங்கள்.

    * நச்சுத்தன்மை மனதில் கொண்டவர்கள் நண்பர்களாக இருந்தாலும் வேண்டாம்.

    ஆக இதில் இரண்டு விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். ஒன்று இத்தகையோரை நாம் தவிர்க்க வேண்டும். மற்றொன்று இப்படியெல்லாம் நாமும் இருக்கக் கூடாது என்பதுதான்.


    படித்தேன்-பகிர்ந்து கொள்கிறேன்

    நம் வாழ்க்கையில் இவர்களையெல்லாம் தவிர்த்து விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது வேறு கண்ணோட்டத்தின் வெளிப்பாடு.

    உப்பு மூட்டை மனிதர்கள்

    இந்த நபர்கள் தான் பழகும் மனிதர்களின் ஆற்றலை குறைத்து விடுவார்கள். நம் நேரத்தினை வீணடிப்பவர்கள். தனக்கு மட்டுமே பிறர் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். மற்றவர் வளங்களை சுரண்டுபவர்கள்.

    ஆதிக்க மனிதர்கள்

    இவர்களுக்கு அதிக பெருமை வேண்டும். பிறரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவார்கள். அப்படியே செய்பவர்களும் கூட.

    * கொசு மனிதர்கள்: இவர்கள் எதிர்மறை எண்ணங்கள், செ யல்கள் கொண்டவர்கள். ஆனால் பிறரிடமிருந்து நன்மைகளை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எதிர்மறையினையே செய்வார்கள். இவர்களி டம் எந்த நல்ல விஷயங்க ளும் கிடையாது. ஆனால் பிறரிடம் உள்ள நன்மைகளை எடுத்துக் கொள்வார்கள்.

    முதலை மனிதர்கள்

    இவர்கள் பாசாங்குக்காரர்கள். அடுத்த வரது ரகசியங்களை அறிந்துகொள்ள அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஒருவருக்கு பிரச்சினை நேரும் பொழுது அவர்கள் ரகசியங்களை அவர்களுக்கு எதிராக பயன் படுத்துவார்கள். கொடியவர்கள், பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

    பச்சோந்தி மனிதர்கள்

    இந்த மனிதர்கள் பொறாமை கொண்டவர்கள். உங்களை கண்காணித்து உங்கள் வெற்றிகளை பாராட்டாமல், ஆதரிக்காமல் இருப்பார்கள். தோல்விகளை பெரிதுப்படுத்துவார்கள். உங்களை குற்ற உணர்வில் கூட தள்ளி விடுவார்கள்.

    கனவுக் கொலையாளிகள்

    இத்தகு மனிதர்கள் பிறரின் தோல்விகளை விரும்பும். ரசிக்கும் விகார மனம் கொண்டவர்கள். பிறருக்கு எதிலும் தீர்வுகளை பிறருக்கு விரும்பாதவர்கள். சிக்கலை உண்டாக்குபவர்கள்.

    குப்பை மனிதர்கள்

    கெட்ட செய்திகளை மட்டுமே பிறருக்குத் தர விரும்புபவர்கள். அடுத்தவர் ஊக்கத்தினை கெடுப்பவர்கள். பிறரின் இதயத்தினை நொறுக்கி சந் தோஷப்படுபவர்கள்.

    எனவே இத்தகையோரை ஒதுக்கி நேர்மறை சிந்தனை உள்ளவர்களோடு பழகுவதே நம் ஒளி சக்தியினை கூட்டும்.

    Next Story
    ×