என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
விநாயகர் வழிபாட்டால் விலகும் தோஷங்கள்
- சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழவே சங்கடஹர சதுர்த்தி.
- விநாயகப் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்வித்து வழிபடலாம்.
ஒருவரது வாழ்வில் அடுத்தடுத்து சங்கடங்கள் வந்து கொண்டே இருந்தால், சந்தேகமே வேண்டாம். அவை தோஷங்களின் பாதிப்புதான்.
இந்த சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழவே விநாயகருருக்கு உரிய சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை தோற்றுவித்ததாக வரலாறு கூறுகின்றது. இவ்விரதத்தை தொடங்கும் நாளில் சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து சங்கல்பம் செய்து கொண்டு நீராடி விநாயகப் பெருமானைத் தியானம் செய்ய வேண்டும். அன்று உபவாசம் இருப்பது நல்லது.
விநாயக புராணத்தை பாராயணம் செய்தல், சதுர்த்தி விரதம் போன்று இதற்கும் விநாயகப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வித்து வழிபடலாம். மாலையில் சந்திரனை வழிபட்டு, கோவிலுக்கு சென்று அபிஷேகம் பார்த்து கவசம் படித்து முடித்து கொள்ளலாம். இதனால் கடன் தொல்லை, நோய், பகை, தோஷங்கள் மறைந்து நல்லன எல்லாம் விரைவிலேயே அடையலாம்.
சில தோஷங்கள் நிம்மதி இழக்க செய்து விடும். அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழ மையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.
சுக்ல சதுர்த்தி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் வெற்றி பெறும்.
வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கினால் தோஷம் நீங்கி நல்லருள் பெறலாம்.
மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமண தோஷம் விலகி தாலி பாக்கியம் விரைவில் வரும்.
நவக்கிரக தோஷமுள்ளவர்கள் விநாய கருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.
வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை தோஷம் விலகி விடும்.
சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளை யார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்பில் தடை ஏற்பட்டு தோஷத்தால் கல்வி தடை ஏற்பட்டால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் தாருங்கள். பேச்சு தாமதமாகும் குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாய கரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானமாகத் தாருங்கள்.
விநாயகர் ஜாதகத்தை ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வழிபடுவது சிறப்பு தரும். அவருடைய ஜென்ம நட்சத்திரம் அஸ்தம் - ஜென்ம ராசி கன்னி. ஜென்ம லக்கினம் விருச்சிகம்.
இந்த ஜாதகத்தை வளர்பிறை சதுர்த்தி நாளில் தொடங்கி 48 நாட்கள் பூஜை செய்து வர திருமணத் தோஷங்கள் நீங்கும். கணபதி மூல மந்திரத் திரிசதி வாசிக்க வியாபார தோஷம் விலகி லாபம் கிடைக்கும்.
விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றைப் படிக்க படிக்க நீங்கள் நினைத்தது நடக்கும்.
சென்னையில் உள்ள திருநீர்மலை புராணகால முக்கியத்துவம் பெற்று அங்குள்ள மணி கர்ணிகா தடாகம் என்ற திருக்குளத்தின் கரை யில்தான் ராகு-கேது தோஷங்களை போக்கும் தூமகேது விநாயகர் ஆலயம் உள்ளது.
"தூமம் என்றால் ராகு என்றும், கேது என்றால் ஞானகாரகன் கேதுவை யும் குறிக்கும்". இந்த இரண்டு ரூபமும் சேர்ந்த வர்தான் தூமகேது கணபதி.
மேலும் ஆகம வரிசைப்படி, புகை வடிவ தூமராசன் என்ற அரக்கனை அழித்த ரூபமான தூமகேது என்றும் புகழப்படுகிறார்.
ஒரு பெண் ஜாதக அமைப்பில் ராகு-கேதுவால் தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டாலும், மற்ற கிரக தோஷங்களால் தடை ஏற்பட்டாலும், இந்த ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் விலகி திருமணம் நடைபெறும்.
திருமணம் நீண்ட நாட்களாக தடைபட்டால், அதற்குரிய பரிகாரத்தை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று காலை எட்டு மணி முதல் பதினோரு மணி வரை, நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்காக, சந்தான கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.
விசேஷ திராவிய ஹோமம் முடிந்ததும் மிகப்பெரிய வலம்புரி சங்கால் பால் அபிஷேகம் தூமகேது கணபதிக்கு நடத்தப்பட்டு, அன்று வரும் அனைத்து கணவன்-மனைவிக்கும் சங்கு பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.
முதன்முதலாக கணபதியின் கல்யாண வைபோக விழாவை மிகச்சிறப்பாக நடத்திய பெருமை திருநீர்மலை அடிவாரத்தில் உள்ள தூமகேது விநாயகர் ஆலயத்தையே சேரும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கும், காரைக்குடிக்கும் இடையே அமைந்துள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் அருள் பாலித்து வருகிறார். ஆறடி உயரத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கும் இந்த விநாயகர் வலது கையில் சிவலிங்கத்தினை வைத்து யோக நிலையில் உலக நன்மைக்காக ஞானத்துவம் புரிந்து கொண்டிருப்பதாக ஐதீகம்.
கேட்டவருக்கு கேட்டவரம் தரும் இவ்விநாயகர் வலஞ்சுழித்த நிலையில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பதால் இவரை வழிபடுவோருக்கு தோஷங்கள் விலகி வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதுச்சேரியில் உள்ள விநாயகரை மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக போற்றி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
தாமரை, அருகம்புல்லுடன் தேங்காய்களை மாலையாக கோர்த்து மணக்குள விநாயக ருக்கு அணிவித்து வணங்கினால் அவர் முன்வினை தோஷங்களை மறைய செய்து மனம் குளிர வைப்பார் என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனவே மன அமைதியை பெற விரும்புபவர்கள் மணக்குள விநாயகரை தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
திண்டிவனம் அடுத்த தீவனூரில் பொய்யா மொழி விநாயகர் கோவில் உள்ளது. நெல்லுக்குத்தி விநாயகர்: நெல்லுக்குத்த பயன்பட்ட கல் இங்கு விநாயகராக மாறியதால் இவருக்கு நெல்லுக்குத்தி விநாயகர் என்றும் பெயர் வந்தது. ஒரு நாள் மிளகு வியாபாரி ஒருவரிடம் விநாயகருக்கு பொங்கல் படைக்க சிறிது மிளகு வேண்டும் என கேட்க, அதற்கு மூட்டையில் உளுந்து உள்ளதாக பொய் கூறினார்.
ஆனால் அந்த மூட்டைகளுடன் உளுந்தூர்பேட்டை சந்தைக்கு சென்று மூட்டைகளை பிரித்தவர் உளுந்து இருப்பது கண்டு திடுக்கிட்டார். உடனே அங்கிருந்து தீவனூர் வந்த விவசாயி விநாயகரிடம் முறையிட்டார். பின்னர் கோவில் பிரசாதம் பெற்று உளுந்தூர்பேட்டை சென்றவர் மூட்டை யில் இருப்பது மிளகாக மாறி இருந்ததை கண்டார். எனவே இவர் பொய்யா மொழி விநாயகர் என பெயர் பெற்றார்.
இந்த கோவில் தலவிருட்சம் விழுதில்லா ஆலமரம் ஆகும். மும்மூர்த்திகள் இங்குள்ள விநாயக ரிடம் வரம் கேட்க வந்து ஆலமரமாக ஆன தாக வரலாறு. இந்த ஆல மரம் விழுதில்லாதது தனிச்சிறப்பாகும். இந்த மரத்தை சுற்றி நூல் சுற்று வோருக்கு 90 நாட்க ளுக்குள் மாங்கல்ய தோஷங்கள் விலகி பாக்கியம் கிடைக்கும்.
சுயம்பு மூர்த்தியாக விளங்கும் இந்த பொய்யாமொழி விநாயகர் சன்னதியில் திருமணம் நடைபெறும் அனைவருக்கும் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக பிறக்கும் என்பது ஐதீகம்.
மேலும் குழந்தை வரம், மாங்கல்ய பாக்கியம், வியாபாரம் தழைக்க என பலவித தோஷ நிவர்த்தி வேண்டுதல்கள் இங்கே நிறைவேறுகின்றன.
விநாயகர் வழிபாட்டால் தோஷங்கள் விலகும் அடுத்த வாரம் தொடரும்....
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்