search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தீயவை தரும் விரதம்!
    X

    தீயவை தரும் விரதம்!

    • துரியோதனனிடமும் பல நல்ல குணங்கள் இருந்தன.
    • தன் மனைவியினை அன்போடும், மரியாதையோடும் நடத்தியவன்.

    மகாபாரதத்தில் துரியோதனன் செய்த செயல்களே அவரை பெரிய வில்லனாக கூறுகின்றன. உண்மைதான். ஆனால் துரியோதனனிடமும் பல நல்ல குணங்கள் இருந்தன.

    * அவனது நாட்டினைப் பொறுத்த வரையில் குடிமக்களின் மீது மிகுந்த அக்கறை கொடுத்தான்.

    * தன் உடன் பிறந்த சகோதரர்களை சிறப்பாக பாதுகாத்தான்.

    * யுத்தத்தில் கடைசி வரை சிறந்த வீரனாக இருந்து மடிந்தான்.

    * தன் மனைவியினை அன்போடும், மரியாதையோடும் நடத்தியவன்.

    * தன் நண்பன் கர்ணனுக்காக தயங்காமல் சமுதாயத்தில் கவுரவ நிலையினை ஏற்படுத்தியவன். ஆனால் பல அழிவுப் பூர்வமான சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டான்.

    * மகா பாரத யுத்தம் நாட்டு நன்மைக்காக நடத்தப்பட்டது அல்ல. துரியோதனின் தீய எண்ணத்தினால் நடத்தப்பட்டது. பாண்டவர்களுக்கு 5 வீடு கூட தர மறுத்து தன்னை மிகவும் தீயவன் ஆக்கிக் கொண்டான் துரியோதனன்.

    * பாண்டவர்கள் உலகில் எங்கு வாழ்வதை யும் துரியோதனன் வெறுத்தான். இந்த அளவு அதிகமான வெறுப்புணர்ச்சியே துரியோதன னுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் தீமையை ஏற்படுத்தியது.

    * அதிகம் தீய யோசனைகளைச் சொன்ன 'சகுனி'யைச் சார்ந்து இருந்தான். அவன் சொல்படியே நடந்தான்.

    * தன் நலனுக்காகவே எதனையும் செய்தான்.

    * திரவுபதி பெண்தானே. பல வீனமானவள் என தப்பு கணக்கு போட்டு மிக கீழ்தரமாய் நடந்தான். திரவுபதியின் பிறப்பு, பலம் இதனை கணிக்கத் தவறி விட்டான்.

    இந்த தீய குணங்களினால் துரியோதனன் இழந்தது ஏராளம், ஏராளம். பேராசையும், மூர்க்கத்த னமும் ஒரு சாம்ராஜ்யத்தினையே சீரழித்தது. துணிச்சல் உடைய வனாக இருந்தும் தலைமைப் பதவிக்கான தகுதிகள் இருந்தும், அனைத்து பிரச்சினைகளையும் (அவனே உருவாக்கியது ஆனா லும்) எதிர் கொண்டாலும் அவன் அழிவினை தீய குணங்களே ஏற்படுத்தின என்பதே உண்மை.

    * என்னால் முடியாது என்று சொல்வதற்கு முன் நீங்கள் அதனை முடியும் என்று சொல்ல ஏதாவது முயற்சி செய்தீர்களா?

    * காலை முதல் இரவு வரை தன் பிரச்சினை ஒன்றினைப் பற்றியே பேசுவது, நினைப்பது, புலம்புவது, பின் மறுநாளும் அதனையே தொடருவது என்ற வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமா?

    * இப்படி இதனையே நீங்கள் பேசுவதால் அதுவே உங்களிடம் வந்து விடுமாம். தேவையா இது? ஆக நல்லவற்றினை மட்டுமே நினைத்து பழகுவோமே!

    * அப்படி நினைத்தால் நீங்கள் விரும்பியதே உங்களுக்கு வரும்.

    * பயம், தயக்கம் என்று வந்து விட்டால் போதும் தோல்வி ஓடி வந்து பசை போல் ஒட்டிக் கொள்ளும்.

    *ஆக அழிவுப்பூர்வமான எண் ணங்கள் பக்கமே கூட போகா தீர்கள்.

    * எனக்கு கடவுள் எதுவுமே கொடுக்க வில்லை என்று எண்ணாதீர்கள். '10 கோடி' ரூபாய் தருகி றேன். உன் இரண்டு கால்களை யும் கொஞ்சம் வெட்டிக் கொள் என்றால் நீங்கள் சம்ம திப்பீர்க ளா? ஆக விலை மதிப் பற்ற பல பொக்கிஷங் களை இறைவன் நமக்குத் தந்துள்ளார் என்பதே உண்மை.

    * அவரவரின் முதல் எதிரி அவரது சோம்பல்தான். இருப்பதைக் கொண்டு நிறைவு காணாவிடில் வாழ்வு துக்கம் நிறைந்தது ஆகி விடுகின்றது.

    பற்றற்ற வாழ்க்கை போன்ற ஒரு சவுகரியமான வாழ்க்கை கிடையாது. ஆனால் அவ்வாறு அநேகராலும் வாழ முடிவதில்லை. தெரிந்து எந்த குற்றங்களும், அதாவது சொல், சிந்தனை, செயல் இவற்றினால் செய்யாமல் இருந்தாலே மனம் தெளிவாக இருக்கும்.

    இறைவனைத் தவிர யாரிடமும் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். கேட்கவும் வேண்டாம். அப்படி இருந்தால் உங்கள் மீது மரியாதையினையும், கவுரவத்தினையும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும்.

    இறைவனுக்கு நம்மிடம் இருப்பதைக் கொண்டு செய்தாலே போதும். மற்றவர்களை கொள்ளையடித்து நான் இறைவனுக்கு செய்கிறேன் என்பதனை இறைவன் ஒரு போதும் ஏற்பதில்லை.

    நீலஸ் என்பவர் இளம் வயதிலேயே போர் திறமையை நன்கு அறிந்த காரணத்தினால் சோழ மன்னர் முத்தரையா என்பவரிடம் சேனாதிபதியாக பணியாற்றினார். மிகத் திறமையாக பணியாற்றியதால் முத்தரையர் நீலனை ஆல என்ற நாட்டிற்கு அரசனாகவே ஆக்கினார். இந்நாட்டின் தலைநகரம் திருமங்கை என்பதால் திருமங்கை அரசன் என்றே குறிப்பிடப்பட்டார்.

    எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து அவர்களை அழித்ததால் 'பாகாலன்' என்ற பெயர் பெற்றார்.

    திருமங்கை மன்னர் குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார். அவரது மனைவியின் வேண்டுகோள்படி 1008 வைணவர்களுக்கு தினமும் விருந்து அளித்தார். இப்படி தொடர்ந்து செய்ததால் இவரது செல்வம் வெகுவாய் குறைந்தது. இருப்பினும் இவர் மனைவிக்கு அளித்த வாக்குறுதியினை விடவில்லை.

    ஆகவே கொள்ளையடித்து அதில் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளித்தார். இதனை இறைவன் விரும்புவாரா? இல்லை ஏற்றுதான் கொள்வாரா? ஓருநாள் இறைவனும், இறைவியும் மணக்கோலத்தில் அதிக நகைகளை அணிந்து கொண்டு அவ்வழி வந்தனர். மன்னரும் அவர்களது நகைகளை கொள்ளையடித்து மூட்டைகளாகக் கட்டினார்.

    ஆனால் என்ன ஆச்சரியம்? அந்த மூட்டைகளை அவரது ஆட்களால் நகர்த்தக் கூட முடியவில்லை. கோபம் அடைந்த திரு மங்கை மன்னர் மணமகனாக இருந்த திரு மாலைப் பார்த்து 'நீ ஏதோ மந்திரம் செய்துள் ளாய்? அந்த மந்திரத்தினை உடனடியாக சொல். நான் இந்த மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மன்னர்.

    திருமால் மன்னரை அருகே வருமாறு அழைத்தார். மன்னன் காதில் ரகசியமாக "நாராயணா" என்றார். அதனை உச்சரித்த வுடன் மன்னன் தெளிவு பெற்றான். தன் தவறுகளை உணர்ந்து திருந்தினான்.

    திருமாலும், மகாலட்சுமியும் மன்னனுக்கு காட்சி அளித்தனர். மன்னன் அனைத்தினையும் துறந்தான். திருமாலை பாடி துதித்து திருமங்கை ஆழ்வார் என்றும் ஆனார்.

    இந்த கதை உணர்த்துவது என்ன? இறைவனுக்கே என்றா லும் இறைவன் திருட்டினை ஏற்ப தில்லை. அப்படியிருக்க சுய நலத்திற்காக திருடி விட்டு சாமிக்கும் நான் ரூ.100 பூ வாங்கி னேன் என்று கூறுவது பாவமே. இறைவன் அதனை ஏற்பதில்லை என்பதே உண்மை.

    பெரிய தவறு செய்பவர்க ளுக்கும் திருந்த இறைவன் வாய்ப்பு தருகின்றார்.

    ராவணனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகம். "இன்று போய் நாளை வா" என்று கூட வாய்ப்பு கிடைத்தது. ராவணனால் தன்னை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

    கர்ணனுக்கும் கிருஷ்ணன் அனைத்தையும் விளக்கினார். 'செஞ்சோற்று கடன்' என்பதற்காக கர்ணன் தவறு எனத் தெரிந்தும் துரியோதனன் பாதையில் சென்றான்.

    பெற்ற மகனான பிரகலாதனை வெகு காலம் ஹிரண்யன் கொடுமை செய்தான். இறுதியில் இறைவன் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை அழித்தார்.

    துரியோதனனுக்கு கிருஷ்ணன் 'ஸ்ரீமன் நாராயணனே' என்று நன்கு தெரிந்தும் தன்னை திருத்திக் கொள்ள முயலவில்லை. ஆனால் அர்ஜுனனோ சரணாகதி வழியில் கிருஷ்ண னிடம் வந்தான்.

    முதலில் நம் பெற்றோர் சொல்வதை பெரியோர் சொல்வதை, ஏற்க, செயல்பட கற்க வேண்டும். பல கர்மாக்கள் நம்மை சேராமல் அவர்கள் அறிவுரையே நம்மை காப்பதற்கு அரணாக நிற்கும்.

    எத்தனை முறை எழுதினாலும், எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் ஞாப கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய சில வரிகளை நாம் பார்ப்போம். இவை களை நடை முறைப்படுத்தா விட்டால் இன்றி ஒரு வர் தன்னுள் ஒளி யினைத் தேட முடியாது.

    * அதிக அழி வுப்பூர்வமான சிந்தனை, செயலில் இருப்பவர்கள் உட னடியாக அதனை விட்டு வெளிவர வேண் டும். இது ஒரு சுழல். ஒருவரை அழித்து விடும்.

    * காலை முதல் மாலை வரை புளி மூட்டை போல் அசையாது அமர்ந்தே இருப்பது கொடுமையான தற்கொலைக்குச் சமம்.

    * அதிக மது அருந்துதல். இதன் தீங்கினை சொல்லாதவர்கள் இல்லை.

    * உடற்பயிற்சி அன்றாடம் 20 நிமிடமாவது அவசியம். * சூரிய ஒளியினை உங்கள் உடலும், ஆத்மாவும் பெற வேண்டும்.

    * அதிக சர்க்கரை, அதிக உப்பு இவை ஒருவர் அவரே அவரது ஆயுளை குறைத்துக் கொள்ளும் பாதை.

    * உணவில் ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லையெனில் ஒருவர் வரும் புலன்களை கட்டுப்படுத்துவது கடினம்.

    * செல்போனிலேயே வாழ்க்கையை செலவிடுபவர் தன் வாழ்வினை வீணடிக் கின்றார்.

    * கோபம், எரிச்சல், முரட்டுத்தனம் இவை ஒருவரை அழிக்கும் ஆயுதங்கள்.

    * சற்று ஓய்வு, பொழுது போக்கு அவசியமே.

    * சுத்தமான ஆடை அணிவது அவசியம்.

    * எப்போதும் சோர்ந்த, பலவீனமான முகம் வெற்றி தராது.

    * ஒருவரை நேருக்கு நேர் பார்த்து பேச வேண்டும். உங்களது கம்பீரம் உயரும்.

    * நிதானமாய், தெளிவாய், கூச்சலின்றி பேச வேண்டும்.

    * பசியோடு அதிக நேரம் இருப்பது கடினம்தான். சேமிப்பு என்பதும் கடினம்தான்.

    நல்ல புத்தகங்களை படிப்பது கடினம்தான். இந்த கடினத்தினை நாம் பின்பற்றினால் வெற்றி நமக்குதான்.

    Next Story
    ×