search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மருத்துவம் அறிவோம்- பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய்
    X

    மருத்துவம் அறிவோம்- பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய்

    • உணவுகளை பேக் செய்யும்போது சிலவற்றில் உள்ள கெடுதியான ரசாயனங்களால் புற்றுநோய் ஆபத்தும் உள்ளது என்கின்றனர்.
    • 16 மணி நேரம் உணவு தவிர்ப்பு என்பதெல்லாம் மருத்துவர், நிபுணர் இவர்கள் ஆலோசனைப்படியே எடுக்க வேண்டும்.

    புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. உலகெங்கிலும் 13.15 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்வில் இந்த புற்றுநோயை எதிர்கொள்கின்றனர்.

    சமீபத்திய மருத்துவ முன்னேற்றம் காரணமாக இதன் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும் இதன் பாதிப்பு விகிதம் கூடித்தான் இருக்கின்றது.

    உணவுப் பொருட்களை பேக் செய்யும் கவர்கள், பொருட்களில் இருந்தும் சில ரசாயனங்களில் இருந்தும் இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    சுமார் 189 ரசாயனங்கள் மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

    இன்றைய வாழ்க்கை சூழலில் ஏதோ ஒரு பிரிவு சம்பந்தமான புற்றுநோய் பாதிப்பிற்கு சுமார் 40 சதவீத ஆண்களும், 38 முதல் 39 சதவீதபெண்களும் ஆளாவதாக அமெரிக்க புற்றுநோய் ஆய்வு குறிப்பிடுகின்றது. மேலும் மார்பக புற்று நோயினைப் பொறுத்தவரை 8 பெண்களில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    1990களில் இருந்தே ஸ்கிரீனிங் என்ற முறையில் மார்பகங்களை பரிசோதித்து அறிவதன் மூலம் அதிக அளவில் இதன் பாதிப்பினால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இளம் பெண்களுக்கும் எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது என்பதைத் தெளிவாக்க ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    * பெண்களுக்கே இது அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

    * 50 வயதினை தாண்டியவர்கள்.

    * பரம்பரை உறுப்பினர்கள்.

    * கேன்சர் பாதிப்பினை ஏற்படுத்தும் ரசாயனங்கள் போன்றவை பாதிப்பிற்கு முக்கிய காரணங்கள் ஆகின்றன.

    * எப்போதும் சுறுசுறுப்பாக இருத்தல்.

    * சீரான எடை பராமரிப்பு (குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு)

    * 30 வயதிற்குள்ளாக குழந்தை பெற்றுக் கொள்வது, தாய்ப்பால் அளிப்பது போன்றவை தவிர்ப்பு முறையாகவும் பாதுகாப்பு முயற்சிகளாகவும் அமையும்.

    உணவுகளை பேக் செய்யும்போது சிலவற்றில் உள்ள கெடுதியான ரசாயனங்களால் புற்றுநோய் ஆபத்தும் உள்ளது என்கின்றனர். இதில் பிளாஸ்டிக் உள்பட சிலவற்றினை கூறியுள்ளனர். தரம் குறைவானவைகளை பயன்படுத்தாது டிபன் பாக்ஸ் (எவர்சில்வர்) வாழை இலை இவையெல்லாம் எத்தனையோ பாதுகாப்பு எனலாம்.

    கண்ணாடி பொருட்களால் இத்தகைய பாதிப்பு இல்லை. எனினும் அனைத்திற்கும் கண்ணாடி, மண்பாண்டங்கள் இவற்றினை பயன்படுத்துவது கடினம்.

    ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். மது, புகை போன்றவற்றினை தவிர்ப்பது சிறந்த பாதுகாப்பினைத் தரும்.

    குறிப்பிட்ட நேரத்திற்கு உண்ணுதல்:

    குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தின் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்பாடு, உடல் எடை குறைப்பு ஆகியவற்றினை அடைய முடியும் என ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இது மட்டும் அல்லாது இம்முறையின் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

    ஒருவரது வயது, பாலினம், செய்யும் வேலை இவற்றினைக் கொண்டே இந்த முறை பயன்படுத்தப்பட வேண்டும். முதியவர்கள் கூட இதன் மூலம் பயன் பெற முடியும். நீரிழிவு பிரிவு, கல்லீரல் கொழுப்பு மற்றும் சில கடுமையான பாதிப்புகளுக்கு எதிராகக் கூட இந்த உணவு முறை பயன்படுகின்றது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவ தால் தொற்று நோய்களில் இருந்து கூட பாதுகாப்பு அளிக்கின்றது என விஞ்ஞானிகளின் ஆய்வு வலியுறுத்துகின்றது.

    கல்லீரல் கொழுப்பு நோய் என்பது சரி செய்யப்படாமல் இருக்கும் போது கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் கூடவே நீரிழிவு நோய் இருந்து விட்டால் பாதிப்புகள் கூடுகின்றன.

    பொதுவில் மாலை 6 மணிக்குள் இரவு உணவினை முடித்து காலை 6 மணி முதல் 7 மணிக்குள் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அநேகருக்கு எளிதாக இருக்கின்றது.

    சிலர் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு எடுத்துக் கொள்வர். மீதி 18 மணி நேரம் உணவின்றி இருப்பர்.

    உணவு உண்ணாத போதும் நீர் குடிப்பது அவசியம்.

    மூன்று வேளை உணவு, அதில் சத்துக்களில் கவனம், தவறான உணவுகளை தவிர்த்தல், அதிக உப்பு, புளி, காரம் இன்றி இருத்தல், உடற்பயிற்சி செய்தல், நொறுக்கு தீனி அறவே தவிர்த்தல், இரவு உணவினை 7 மணிக்குள் முடித்து விடுதல் போன்றவையே நல்ல பலன் கொடுக்கும்.

    16 மணி நேரம் உணவு தவிர்ப்பு என்பதெல்லாம் மருத்துவர், நிபுணர் இவர்கள் ஆலோசனைப்படியே எடுக்க வேண்டும். முரட்டு பயிற்சி முறைகள் நம்மூரில் சர்வ சாதாரணம் என்பதால் மருத்துவர் அறிவுரை இன்றி எதுவும் செய்வது தவறு.

    மேலும் ஒரு நாளில் நீண்ட நேரம் உணவின்றி இருப்பதற்கு சமீப கால ஆய்வுகள் சில எதிரான கருத்துக்களை கொண்டு உள்ளன. ஆய்வுகள் தொடரவும் செய்கின்றன.

    ஆக அதிக உணவு, தவறான உணவு, கண்ட நேரத்தில் உணவு, நொறுக்கு தீனி, காபி, டீ இவற்றினை தவிர்த்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    பக்கவாத பாதிப்பு 11 சதவீதம் இறப்பிற்கு காரணம் ஆகின்றது என வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.

    இதில் முதல் பிரிவாக- மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் போது மூளைக்குத் தேவை யான ஆக்சிஜன் கிடைப்பது இல்லை.

    2-வது பிரிவு மூளையில் ரத்தக் குழாய் வெடித்து வெளியே ரத்தம் கசிந்து அருகில் உள்ள திசுக்களை பாதிப்பதால் ஏற்படுகின்றது.

    சில சமயங்களில் 'மினிஸ்ட்ரோக்' என்று கூறப்படும் 2 நிமிடம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது என மூன்று வகைப்படும்.

    பக்கவாதம் என்பது மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இதனைப் பற்றிய மேலும் சில விவரங்களை அறிவோம்.

    கமலி ஸ்ரீபால்

    * சிலர் பக்கவாதத்தினையும், ஹார்ட் அட்டாக் இரண்டினையும் குழப்பிக் கொள்கின்றனர். பக்கவாதம் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு, பாதிப்பு ஆகும். ஹார்ட்அட்டாக்- மாரடைப்பு என்பது இருதய ரத்த குழாயில் ஏற்படும் அடைப்பு ஆகும்.

    * பக்கவாதத்திற்கு முக்கிய காரணங்களாக உயர் ரத்த அழுத்தம், புகை பிடிப்பது, அதிக கொழுப்பு (கொலஸ்டிரால்), அதிக எடை, சர்க்கரை நோய், கழுத்து, தலை இவற்றில் அடிபடுதல் ஆகியவைகளைக் கூறுகின்றனர்.

    அதிக மன உளைச்சல், மது அருந்துதல் ஆகியவையும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

    * முகம் ஒரு பக்கம் கோணல் ஆகுதல்.

    * தோள் பலவீனம்

    * பேசுவதில் குழறல்

    * குழப்பம், பார்வை தெளிவின்மை.

    * நடக்க இயலாமை

    * அதிக தலைவலி

    இவைகளை ஸ்டிரோக் பதிப்பின் அறிகுறிகளாகக் கூறலாம்.

    * பக்கவாதம் ஏற்பட்டால் சரி செய்ய முடியுமா? என்பது பலரின் சந்தேகமாக இருக்கின்றது.

    * அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாது மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவரை அழைத்து செல்ல வேண்டும். மிக நல்ல முன்னேற்றத்தினை சிகிச்சை மூலம் கொண்டு வர முடியும்.

    * வயது கூடும்போது பக்கவாத பாதிப்பின் அபாயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 55 வயதினை கடக்கும்போது ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இதன் பாதிப்பு அபாயம் இரட்டிப்பு ஆகின்றது.

    * சிலருக்கு அறிகுறிகள் காட்டாது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யும்போது பாதிப்பினைக் காட்டலாம். இவர்கள் தலைவலி, மயக்கம், கவனிக்கும் திறன் குறைதல் ஆகிய காரணங்களுக்காக மருத்துவரை அணுகியிருக்கலாம். வயது கூடும்போது எதனையும் சாதாரணம் என்று கவனிக்காமல் இருக்கக் கூடாது.

    * மினி ஸ்டிரோக் சின்னது தானே என விட்டு விடக்கூடாது. பெரிய ஸ்டிரோக் வரும் முன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். உரிய கவனம் செலுத்தி விட்டால் பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.

    * ஸ்டிரோக் பாதிப்பில் உடனடி கவனிப்பு பெறுபவர்கள், இணைப் பாதிப்புகள் இல்லாத நிலையை இயல்பு நிலை மருத்துவத்தின் மூலம் பெற முடியும்.

    சிலர் குறைந்த அளவு பாதிப்போடு நலம் பெறுவர்.

    சிலருக்கு பாதிப்புகள் கூடுதலாக இருக்கலாம்.

    Next Story
    ×