search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆடத்தெரிந்த நானே ஆடிப்போனேன் - மீனா
    X

    ஆடத்தெரிந்த நானே ஆடிப்போனேன் - மீனா

    • கட்டியிருந்த பட்டுப்புடவை யுடனேயே படப்பிடிப்புக்கு சென்றேன்.
    • மறக்க முடியாத நினைவுகள் உண்டு.

    மதுரை டூ காரைக்குடி... தினசரி பயணமாகி விட்டது. அதிகாலையில் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு காரைக்குடி செல்வேன்.

    இரணியன் பட காட்சியில் நடித்து விட்டு இரவில் மதுரை ஆஸ்பத்திரிக்கு வருவேன். அம்மாவை பார்த்துவிட்டு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இரவில் தூங்குவேன்.

    தினமும காரைக்குடிக்கு சென்று இரணியனுக்காக நடித்தாலும் மனம் மட்டும் பிரகலாதனை போல் என் அம்மா மீதே இருந்தது என்பதே உண்மை.

    அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் காட்சிகளில் சொதப்பாமல் சிறப்பாக நடித்ததாக டைரக்டர் பாராட்டினர். அது மனதுக்கு நிறைவாக இருந்தது.

    அம்மா உடல் நலம் தேறிக்கொண்டிருந்தார். ஒரு நாள் டாக்டர் என்னை அழைத்தார்.

    'மேடம், அம்மா ரொம்ப டென்ஷனாக இருக்கிறார்கள். அந்த அளவு டென்ஷனை கொடுக்காதீர்கள்' என்று ஆலோசனை வழங்கினார்.

    அதை கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அம்மா டென்ஷன் ஆகும் வகையில் நடந்ததில்லை.

    ஆனால் இரவு-பகல் பாராமல் உழைத்தது. சரியான சாப்பாடு கிடையாது. தூக்கம் கிடையாது. அதையெல்லாம் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்தவர் அம்மா.

    ஒரு தாயாக பிள்ளைபடும் கஷ்டங்களை பார்க்கும் போது இயல்பாகவே அவரது மனமும் கஷ்டப்படத்தானே செய்யும். அப்படித்தான் அவரது மனமும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.

    முடிந்தவரை அம்மா மனம் கஷ்டப்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டேன்.

    ஆடத்தெரியாதவர் தெருகோணல் என்று சொல்வாராம். அப்படியானால் ஆடத் தெரிந்தவர்....?

    பாரம்பரிய நடனத்தை முறையாக கற்றிந்த நானே அய்யய்யோ நம்மால் ஆட முடியுமா? என்று தயங்கியதும் உண்டு.

    நடிகர் சிரஞ்சீவியுடன் தெலுங்கு படமான முட்டா மேஸ்திரியில் நடித்தேன். அந்த படத்தில் 'சிக்கி சிக்கி சான்....' என்ற சூப்பரான பாடல் காட்சி. நானும் சிரஞ்சீவியும் ஆடும் டூயட் பாடல் அது.

    அந்த கால கட்டத்தில் தான் 'ஹிப்-ஹாப்' நடனம் நமது திரை உலகிலும் அறிமுகம் ஆனது. அந்த படத்தில் நடன மாஸ்டர் பிரபுதேவா.

    சிக்கி சிக்கிச்சான் பாடலில் அவர் ஹிப்-ஹாப் நடனத்தையும் புகுத்தி இருந்தார். அது ஒரு மேற்கத்திய இசை நடனம்.

    அமெரிக்காவில் உருவானதாக சொல்வார்கள். இதில் அப்ராக், பிரேக்கிங் மற்றும் பங்க் ஸ்டைலும் அடங்கும்.

    அந்த பாடல் காட்சியில் நடிக்க அந்த வகை நடனத்தை மாஸ்டர் சொல்லித் தந்தார். டான்சர்ஸ் ஆடிக் கொண்டே இருந்தார்கள். நானும் சொல்லித் தந்தபடி ஆடினேன். ஒரே மூவ்மென்ட்டை 4 தடவை ஆடனும். எனக்கு ஒரு தடவை ஒழுங்காக வரும். பின்னர் வராது. அய்யய்யோ நமக்கெல்லாம் இந்த 'ஸ்டெப்' வராது போயிருக்கேன் என்று மனசுக்குள் நினைத்தேன். அதை எப்படி வெளியே சொல்வது?

    மீனா என்றால் பெரிய டான்சர்.... அவளே ஆட முடியாது என்றால்... மனசுக்குள் அவ மானமாக இருந்தது.

    நான் தயங்கியதை பார்த்து சிரஞ்சீவி என்னை ஊக்கப்ப டுத்தினார். ம்.... ஆடு.... உன்னால் நிச்சயம் முடியும் என்று உற்சாகப்ப டுத்தினார். இருந்தாலும் என்னால் முடியவில்லை என்பதை மாஸ்டரிடம் சொல்லி விட்டேன். பின்னர் நான் சரியாக நடித்த 2 டேக்குகளை எடுத்து காட்சியில் சேர்த்தார்கள்.

    அந்த பாட்டு தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. ஆந்திராவில் பட்டி தொட்டி யெல்லாம் ஒலித்தது. அந்த படத்தில் நடித்த போது ஒருநாள் சிரஞ்சீவி அவரது வீட்டில் இருந்து டிபன் கொண்டு வந்து எல்லோருக்கும் பரிமாறினார்.

    தோசையும், சிக்கனும் தான். பரிமாறியதுமே வாசனை மூக்கை துளைத்தது. வாவ்..... தோசை இவ்வளவு மிருது வாக இருக்குமா?

    மிருது வான தோசை... கூடவே சிக் கன்... செம டேஸ்ட். அந்த மாதிரி ருசி யான மிருது வான தோசை. நான் சாப்பிட் டது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    மேடம் சூப்பரா பண்ணியி ருக்காங்க என்றேன். அது மட்டு மல்ல. அதை பார்த்து விட்டு என் அம்மா அவரது மனைவியை பார்த்து பேசி 'நானும் இந்த மாதிரி தோசை சுட கத்துக்கணும்' என்று ஆசைப்பட்டார்.

    அந்த சமயத்தில்தான் நடிகர் விஜய்-சங்கீதா திருமணம் சென்னையில் நடந்தது. நானோ பயங்கர பிசியாக இருந்தேன். ஐதராபாத், சென்னை, கோவை என்று ஓடிக் கொண்டிருந்தேன்.

    எப்படியாவது திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவசரமாக சென்னைக்கு வந்தேன்.

    என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. நிகழ்ச்சியை பொறுத்து உடை அணிந்து செல்வேன். திருமண நிகழ்ச்சிகளுக்கு எப்படி செல்ல வேண்டும்? கோவில்களுக்கு சென்றால் எந்த மாதிரி செல்ல வேண்டும்? குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும்போது எப்படி இருக்க வேண்டும்? சினிமா தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? என்று எனக்கு நானே வரையறை வைத்துள்ளேன்.

    திருமண நிகழ்ச்சி என்றால் பட்டு புடவை கட்டி, தலையில் பூ வைத்து, நிறைய நகைகள் அணிந்து செல்வேன். எனவேதான் விஜய் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காகவும் பட்டு புடவை அணிந்து சென்றேன். துணைக்கு அப்பாவை அழைத்து சென்றேன். விஜய்க்கு வாழ்த்து சொல்லி விட்டு உடனே ஷூட்டிங் செல்ல வேண்டும். வீட்டுக்கு சென்று உடை மாற்றி செல்லக்கூட நேரமில்லை.

    திருமண நிகழ்ச்சியை யை முடித்து விட்டு காரில் வைத்தே நகைகளை கழட்டி அப்பாவிடம் கொடுத்தேன். கட்டியிருந்த பட்டுப்புடவை யுடனேயே படப்பிடிப்புக்கு சென்றேன். இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கோவைக்கு ரெயிலில் புறப்பட்டேன். தொடர்ந்து பொள்ளாச்சியில் படப்பிடிப்பு. தல.. தளபதி... என்று ரசிகர்கள் கொண்டாடும் இருவரோடும் மறக்க முடியாத நினைவுகள் உண்டு. அதுபற்றி அடுத்த வாரம் விவரிக்கிறேன். பை.... பை..

    (தொடரும்)

    Next Story
    ×