search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: விரதம் இருந்து நடித்தேன்
    X

    மீனா மலரும் நினைவுகள்: விரதம் இருந்து நடித்தேன்

    • எப்படி நடிப்பது என்ற தயக்கம் மனதிற்குள் இருந்தது.
    • பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பிறகு தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    அம்மனாக உங்கள் அழகு மீனா...

    கொஞ்சம் யோசித்து பாருங்கள்... துள்ளித்திரியும் இளம் வயதில் மாடல் உடைகளில் கலக்கிய காலம். காதல், டூயட், ஆட்டம், பாட்டம் என்று திரை களத்தில் கலக்கி கொண்டு இருந்த நேரம். திடீரென்று அம்மன் வேடத்தில் என்னை கொண்டு நிறுத்தினால் எப்படி இருக்கும்....?

    உண்மையிலேயே அப்படி நிறுத்தியும் விட்டார் டைரக்டர் ராமநாராயணன் சார். அந்த காலக்கட்டத்தில் பக்தி படங்களை எடுப்பதில் அவர் வல்லவர் மட்டுமல்ல, அந்த படங்கள் மூலம் மக்களை கவர்ந்தவர். 'பாளையத்தம்மன்' என்ற படத்தில் பாளையத்து அம்மனாக என்னை நடிக்க கேட்டார்கள்.

    அந்த படத்தின் கேமராமேனாக பணியாற்றியவர். விஸ்வநாதன் சார். அவரிடம் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே பல படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் என் மீது அதிக அக்கறை கொண்டவர். அந்த படத்திற்கு என்னை தேர்வு செய்வதாக பேச்சு எழுந்த போதே மீனா நம்ம பொண்ணாச்சே. சூப்பரா இருக்கும் என்று அவரும் சொல்லியிருக்கிறார்.

    ஆக, படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஆனால் எனக் குத்தான் என்னையும் அறியாமல் ஒரு விதமான பயம் மனதில் எழுந்தது. குடும்ப பாங்கான கதைகள், காதல் கதைகள், நகைச்சுவை, சோகம் என்று பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடிக்க தெரியும். கடவுள் வேடத்தை போட்டுக்கொண்டு எப்படி நடிப்பது என்ற தயக்கம் மனதிற்குள் இருந்தது.

    எப்படி இருந்தாலும் ஒத்துக்கொண்டாயிற்று. இனி நடித்து தானே ஆக வேண்டும்...? அதற்கா கவே அந்த காலங்களில் பக்தி படங்களில் அம்மன் வேடங்களில் எல்லோரையும் கவர்ந்த கே.ஆர்.விஜயா அம்மா, நவராத்திரியில் சாவித்திரி அம்மா ஆகியோர் நடித்த படங்களை பார்த்தேன். அந்த படங்களில் தலையில் அம்மன் கிரீடத்தையும் சுமந்த படி கையில் திரிசூலம் போன்ற ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு எப்படி நடித்திருக்கிறார்கள்? அவர்கள் உடல் அசைவுகள், முக பாவனைகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து கற்றுக் கொண்டேன். அதன் பிறகு தான் படப்பிடிப்புக்கு தயாரானேன்.

    இருந்தாலும் சாமி படமாச்சே ஏனோ தானோ என்று இருந்து விடக்கூடாது என மனதிற்குள் முடிவெடுத்து அந்த படத்தில் அம்ம னாக நடிப்ப தற்காக விர தமும் மேற் கொண்டு இருந்தேன். தினமும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பிறகு தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    சிக்கன், மட்டன் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் போது அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன். சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டேன். படப்பி டிப்புக்கான நாளும் வந்தது. மதுரையில் படப்பிடிப்பு.

    மேக்-அப் போட தயாரா னார்கள். முற்றிலும் மாறுபட்ட மேக்-அப். அம்மன் வேடத்துக்கான பட்டு சேலையை பரத நாட்டிய உடைபோல் அணிந்து இடுப்பில் பெரிய ஒட்டி யாணம் அணி வித்தார்கள். முகம், கைகள், காலில் பச்சை வர்ணம் பூசி னார்கள். தலையில் பெரிய கிரீட த்தை அணி வித்தா ர்கள். அதை அணி விப்பதற்கு முன்பு சரியாக பொருந்துவதற்காக தலையில் இன்னொரு கவசமும் உண்டு.

    தலையில் அணிவித்த கிரீடத்தை ஷூட்டிங் முடியும் வரை சுமார் 4 மணி நேரம் அகற்ற முடியாது. படப்பிடிப்பு தொடங்கியது. வெயில் காலம் வேறு. லேசாக வியர்த்ததும் முழங்கைகள், கழுத்து சுருக்கங்களில் பச்சை கலர் அழிந்து வெள்ளையாக சரும கலர் தெரியும். உடனே அதை 'டச்சப்' செய்வார்கள். இதுவே பலமுறை நடக்கும். நான் நடித்த முதல் பக்தி படம் 'பாளையத்து அம்மன்' தான். இந்த படம் மறக்க முடியாத பல அனுபவங்க ளையும் கொடுத்தது.

    அம்மனாக நடித்ததால் பேசுவது, பார்ப்பது, நடப்பது, உடல் அசைவுகள் எல்லாமே முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

    அதற்காக கடுமையான முயற்சி யும், பயிற்சியும் தேவைப்பட்டது.

    ஸ்கூலுக்கு போகும் போது தேர்வு நாளில் கடவுளே, கேள்விகள் எளி தாக இருக்க ணும். பரீட்சை நல்லா எழுதனும் என்று வேண்டிக் கொள்வது போலவே நானும் தினமும் வேண்டு கோள் வைக்க தவறியதில்லை.

    எந்த தப்பும் நடந்து விடக் கூடாது. எல்லா காட்சியும் நன்றாக வர வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொண்டு தான் செல்வேன். பொதுவாக ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சி எடுத்து முடிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும். ஆனால் இந்த படத்தில் ராமநாராயணன் சார் திட்டமிட்டு ஒரு மணி நேரம் கூட வீணாகாதபடி ஷூட்டிங்கை நடத்தினார்.

    தினமும் காலையில் மேக்-அப் போட்டுக் கொண்டு செட்டுக்கு வந்ததில் இருந்து 3 முதல் 4 மணி நேரம் தான் படப்பிடிப்பு நடக்கும். அப்படி 3 நாட்களிவ் ஒரு பாடலை படமாக்கி விட்டார்.

    மூன்று விதமான கெட்-அப்பில் நடித்தேன். பாளை யத்து அம்மன் முகம் பச்சை வண்ணத்தில் இருக்கும். கருமாரி அம்மன் முகம் கருப்பு வண்ணத்தில் இருக்கும்.

    முக்கியமாக அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அட்சயாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ரொம்ப க்யூட்டான குழந்தை. பேச வேண்டிய டய லாக்குகளை கூட படித்து அழகாக பேசுவாள். நான் சின்ன குழந்தையாக இருந்தபோது எப்படி இருந்தேனோ அதே போல் அவளும் இருநததால் எனக்கு அவளை ரொம்பவே பிடித்து போய் விட்டது.

    இதனால் அவளுடன் நடிக்கும் போதும், பேசும் போதும் உற்சாகமாக இருக்கும். அதே போல் 'வேப்பஞ் சேலை' நேர்த்திக்கடன் பற்றியும் கேள்விப் பட்டிருந்தேன். இந்த படத்தில் தான் அது எவ்வாறு நிறை வேற்றப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

    அப்படியே அம்மனாக நடந்து செல்லும் போதெல்லாம் பின்னணி யில் அதிரும் இசையோடு

    திரிபுரசுந்தரி நீ

    பவ தாரணி நீ

    திரிசூலினி நீ

    அசுரசம்ஹாரினி நீ... என்று வரும் பாடல் வரிகள் அப்ப டியே திரையில் அதிர வைக்கும்... நிஜ மாகவே அதிர வைத்த சம்பவங்க ளுடன் அடுத்த வாரம் வருகிறேன்....

    தொடரும்...

    Next Story
    ×