search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பரிசுப்பொருளாக எதை கொடுக்கலாம்!
    X

    பரிசுப்பொருளாக எதை கொடுக்கலாம்!

    • பொருட்கள் பெறுபவருக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும்.
    • கொடுப்பதனை மகிழ்வோடு ஏற்க வேண்டும்.

    வீட்டில் கல்யாணம், கிரக பிரவேசம், பிறந்த நாள் இப்படி விழாக்கள் நடைபெறும் போது உற்றார், உறவினர், நட்பு வட்டாரம் அனைவராலும் பரிசுப் பொருட்கள் குவியும். இதில் ஒரே மாதிரிப் பொருட்கள் பல இருக்கும். இப்போது மக்கள் சற்று சிந்தித்து அவர்கள் தேவை என்ன என்பதனை முன்கூட்டியே அறிந்து வாங்கிக் கொடுக்கின்றனர்.

    கொடுக்கும் பொருட்கள் பெறுபவருக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை அனைவருக்கும் உள்ளது. பலர் பணமாக கொடுப்பர். தேவைக்கேற்ப பெறுபவரே வாங்கிக் கொள்ளட்டும் என்று நினைப்பர். ஆனால் பரிசினை பெறுபவர்கள் கொடுப்பவரின் அளவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொடுப்பதனை மகிழ்வோடு ஏற்க வேண்டும்.

    ஆயினும் எல்லா நாடுகளிலும் மக்களுக்கு சில சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இருக்கின்றன.

    * கூர்மையான பொருட்கள் கத்தி, கத்திரிக்கோல் இவற்றினை யாரேனும் பரிசாக தந்தால் உதாரணமாக சமையலறை கத்தி, கத்திரி கோல், வரவேற்பறையில் அலங்கார மாக சுவற்றில் மாட்டும் போர்வாள், ஈட்டி இவற்றினை கண்டிப்பாய் பரிசாகப் பெறக்கூடாது. இது வாங்குபவர், பெறுபவர் இரு வருக்கும் இடையே பிரிவினை, மனஸ்தாபத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பரவலாக இருகின்றது. மாறாக இதனை உரிய பணம் கொடுத்து ஏற்றுக் கொள்ளலாம்.

    * பல கலாச்சார பிரிவுகளில் ஷூ, செருப்பு இவற்றினை பரிசாக அளிப்பது என்பது 'நீ என்னிடம் இருந்து சென்று விடு' என்று மறைமுகமான பொருளினை அளிக்கின்றது என்று நம்புகின்றனர். எனவே அநேகர் இத்தகு ஷூ, செருப்பு போன்றவற்றினை பரிசளிப்பதும் இல்லை, பெறுவதும் இல்லை.

    * கடிகாரங்கள்- கையில் கட்டுவது, சுவற்றில் மாட்டுவது, மேஜையில் வைப்பது போன்ற கடிகாரங்களையும் சிலர் பரிசு அளிப்பதில்லை. இதனை நல்ல சகுனமாக கருதுவ தில்லை.

    * முன்பெல்லாம் அழகிய எம்ப்ராய்டரி செய்த கைக்குட்டைகளை பெண்ணை விரும்பும் ஆணா ஆணை விரும்பும் பெண்ணோ பரிசுப் பொருட்களாக கொடுப்பர். ஆனால் தற்போது பல வருடங்களாக இது இல்லை. காரணம் கை குட்டை கண்ணீைர துடைக் கும் பொருள் என்று கூறப்பட்டதால் நம்பாத வர் கூட நமக்கேன் வம்பு என்று அதன் பக்கமே செல்ல மாட்டார்கள்.

    * முத்துக்கள் பரிசளிக்கும் போது நம் ஊரில் கூட அதிக கவனம் கொடுப்பார்கள். ஏனெனில் முத்துக்கள் சிலருக்கு அதிர்ஷ்டமாக அமையும். சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லாது அமையும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இதனால் தான் நம் ஊரில் மங்களகரமாக வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ என அனைவரும் விரும்பும் மங்களப் பொருட்களை சேர்த்தே அளிக்கின்ற னரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    மேற்கூறப்பட்டவைகள் சிலருக்கு நம்பிக்கை இருக்கலாம். சிலர் மூட நம்பிக்கை எனலாம். இவை அவரவர் மனநிலையினைப் பொறுத்தது. இருந்தாலும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது.

    சிலருக்கு ஒரு பழக்கம். சதா சர்வ காலமும் ஏதா ஒரு நிகழ்வு, செய்தி, இப்படி ஏதோ ஒன்றினைப் பற்றி விடாது நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களால் எந்த ஒரு செயலினையும் முழுமை யாக செய்ய முடிவதில்லை. இவர்கள் சில விஷ யங்களை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.

    * நம் எண்ண ஓட்டங் களை நாமே ஆராய வேண்டும். அவை உப யோகமானதா? முன்னேற்றத்திற்கானதா? அல்லது பயத்தின் காரணமாக ஏற்படுகின்றதா? என்று ஆராய வேண்டும். இது ஒருவரின் முன்னேற்றத் திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

    * எந்த ஒரு வேலையை செய்தாலும் அதிலேயே முழு கவனம் இருக்க வேண்டும். அந்த நொடி யில் இருந்து ஒவ்வொரு நொடியிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

    * ஒரு பிரச்சினை தொடர்ந்து இருக் கின்றதா? அதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம்- ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஒதுக்கி அதற்காக செயல் படுங்கள், சிந்தியுங்கள். மற்ற நேரத்தில் அன்றாட பணிகளை முறையாய் செய்யுங்கள்.

    * தேவையில்லாத செய்திகளை, ஊர் வம்புகளை தலையில் போட்டுக் கொள்ளக் கூடாது. இவற்றையெல்லாம் முயற்சி செய்யலாமே.

    விஷ்ணுசகஸ்ர நாமம்- பொதுவில் இந்து மத நிகழ்ச்சிகளில் விஷ்ணு சகஸ்ர நாமமும், லலிதா சகஸ்ர நாமமும் ஒலி நாடா மூலமாவது ஒலித்துக் கொண்டே இருக்கும். அம்மன் கோவில்களில் கூட விஷ்ணு சகஸ்ர நாமம் ஒலிக்கச் செய்வார்கள். அம்பிகைக்கு விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்பதில் அத்தனை விருப்பம் என்பர்.

    விஷ்ணு சகஸ்ர நாமத்தின் சிறப்புகள் என்ன என்பதனைப் பார்ப்போம்.

    * மூன்று மிக உயர்ந்த ஆச்சார்யர்கள் இதற்கு பாஷ்யம், விளக்க உரை எழுதியுள்ளனர் அவர்கள் ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜ சார்யா, ஸ்ரீ மத்வாச்சார்யா ஆகியோர் ஆவர்.

    * வைஷ்ணவர்கள் இல்லாத வர்களும் தங்கள் வீடுகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் ஒலிக்கச் செய்வதோ, பாராயணம் செய்வதோ நடைமுறையில் உள்ளது.

    * பிரிந்த ஆத்மா நற்கதியாகவும் இதனை பாராயணம் செய்கின்றனர்.

    * நோய்கள் தீர, பிரச்சினைகள் தீர, நல்ல வாழ்வு அமைய சங்கல்பம் செய்து சிலர் பாராயணம் செய்வர்.

    * இதன் உச்சரிப்பால் நரம்பு மண்டலம் பலப்படுவதாகக் கூறுகின்றனர்.

    * தூக்கமின்மை, தூக்கத்தில் கெட்ட கனவு போன்றவை நீங்குகின்றது.

    * மாலை 5 மணி முதல் 7 மணி வரை உள்ள நேரமே இதனைக் கேட்க உசிதமான நேரம் என்று கூறப்படுகின்றது.

    இப்படி பல நன்மைகள் கூறப்படுகின்றன. இது போல் மற்ற மதங்களிலும் அவரவர் வழிமுறைக் கேற்ற மத பிரார்த்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மன வலிமைக்கு நம் மனம் ஈடுபடும் ஒன்றினை இறுகப் பிடித்துக் கொள்ளலாமே. மீண்டும் குறிப்பிடுகிறோம். இது ஒருவரின் தனி உரிமை, நம்பிக்கை சம்பந்தப்பட்டது மட்டுமே. எந்த நிர்பந்தமும் இல்லை.

    சிவன் கோவிலை தரிசிப்பதன் பலன்கள்

    * திருத்த லங்காடு-பணி யாட்களின் சாப தோஷம் நீங்க

    * திருவள்ளியூர்- சோமாஸ்கந்தரை குலதெய்வமாகப் கொண்டவர்கள் வழிபட வேண்டிய தலம்

    * திருநன்ன லம்-ஞானம் பெற

    * திருமண தீச்சுரம்- கணவரும் தேவையின்றி சந்தேகப்படும் மனைவிமார்க ளும் வழிபட வேண்டிய தலம்

    * திருமருகல்- கணவன் மனைவி மகிழ்ச்சியாய் வாழ

    * திருச்சிக்கல்- பண்டு தாரர்களின் மனசு நீங்க

    * திருச்சேரி-மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு

    * திருக்குவளை- நவக்கிரக தோஷம் நீங்க

    * திருவைமூர்- பல தோஷங்கள் இருப்பவர்கள் வழிபட வேண்டிய தலம்

    * திருநெலிக்கா- கல்வியில் சிறந்து விளங்க

    * திருகடிக்குளம்- பிரச்சினைதீர

    * திருஆலங்குடி- புத்ர தோஷம் நீங்க

    * கொட்டாரம்- மன நிம்மதி பெற

    * திட்டை- சந்திரன் தோஷம் நீங்க

    * பசுபதி கோவில்- ராகு தோஷம் நீங்க

    * கோட்டையூர்- பாபங்கள் நீங்க

    * ஒமப்புலியூர்-சனி தோஷம் நீங்க

    * தர்மபுரம்- சிவ பக்தர்களை அவ மதித்த தோஷம் நீங்க

    * மயிலாடுதுறை- பாவங்கள் நீங்க

    * உத்திர தோச மங்கை- கெட்ட விதி மாற

    * ராமேஸ்வரம்- பித்ரு தோஷம் நீங்க

    * காளையார் கோவில் -இப்பிறப் பின் பயன் பெற மீத முள்ள 8 கோவில்கள் அடுத்த தொடரில் இடம் பெறும்.

    இவை அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. நீங்கள் அறிந்து கொள்ளவே பகிரப்பட்டுள்ளது.

    Next Story
    ×