என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
3-வது டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் - காம்பீருக்கு வாய்ப்பு
Byமாலை மலர்8 Oct 2016 11:13 AM IST (Updated: 8 Oct 2016 11:13 AM IST)
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது
இந்தூர்:
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் தொடங்கியது.
காயம் காரணமாக விலகிய இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுக்கு பிறகு அவர் களம் இறங்கி உள்ளார்.
காயத்தால் விலகிய புவனேஸ்குமாருக்கு பதில் உமேஷ்யாதவ் சேர்க்கப்பட்டார்.
உடல்நல குறைவால் 2-வது டெஸ்டில் விளையாட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார் . நிகோஸ் நீக்கப்பட்டார். வாக்னருக்கு பதிலாக ஜேம்ஸ் நீசம் இடம் பெற்றார்.
டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் வீராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இத்தொடரில் 3 போட்டியிலும் வீராட்கோலியே டாஸ் ஜெயித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 4 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
இந்தியா: கோலி (கேப்டன்), முரளி விஜய், கவுதம் காம்பீர், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, சகா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி, உமேஷ்யாதவ்.
நியூசிலாந்து: வில்லியம் சன் (கேப்டன்) டாம்பதம், மார்ட்டின் குப்தில், ரோஸ் டெஸ்சர், ரோஞ்சி, நீசம், சான்னெர், வாட்சிங், ஜிதன் பட்டேல், மெட் ஹென்சி, போல்ட்.
தொடக்க வீரர்களாக முரளிவிஜய், கவுதம் காம்பீர் களம் இறங்கினர். இருவரும் நிதானத்துடன் ஆட்டத்தை தொடங்கினர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் தொடங்கியது.
காயம் காரணமாக விலகிய இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுக்கு பிறகு அவர் களம் இறங்கி உள்ளார்.
காயத்தால் விலகிய புவனேஸ்குமாருக்கு பதில் உமேஷ்யாதவ் சேர்க்கப்பட்டார்.
உடல்நல குறைவால் 2-வது டெஸ்டில் விளையாட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார் . நிகோஸ் நீக்கப்பட்டார். வாக்னருக்கு பதிலாக ஜேம்ஸ் நீசம் இடம் பெற்றார்.
டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் வீராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இத்தொடரில் 3 போட்டியிலும் வீராட்கோலியே டாஸ் ஜெயித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 4 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
இந்தியா: கோலி (கேப்டன்), முரளி விஜய், கவுதம் காம்பீர், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, சகா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி, உமேஷ்யாதவ்.
நியூசிலாந்து: வில்லியம் சன் (கேப்டன்) டாம்பதம், மார்ட்டின் குப்தில், ரோஸ் டெஸ்சர், ரோஞ்சி, நீசம், சான்னெர், வாட்சிங், ஜிதன் பட்டேல், மெட் ஹென்சி, போல்ட்.
தொடக்க வீரர்களாக முரளிவிஜய், கவுதம் காம்பீர் களம் இறங்கினர். இருவரும் நிதானத்துடன் ஆட்டத்தை தொடங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X